கோ. இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோ. இராமநாதன் (பிறப்பு: மே 30, 1957) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் ஜி. ஆர். மருத்துவமனையின் நிறுவனரும், தலைமை மருத்துவருமாக இருக்கிறார். எழுத்து, பேச்சு இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் தன்னம்பிக்கை, இன்றைய மருத்துவம் ஆகிய மாத இதழ்களின் ஆசிரியருமாவார். இவர் டாக்டர் அ. ராஜசேகரனுடன் இணைந்து எழுதிய "மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._இராமநாதன்&oldid=3614051" இலிருந்து மீள்விக்கப்பட்டது