அ. ராஜசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. ராஜசேகரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது மருத்துவப் பணியைத் தொடங்கி புதுதில்லியிலுள்ள தேசிய மருத்துவத் தேர்வாணையத்தின் தலைவராகவும் உயர்ந்த பெருமைக்குரியவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் துறைப் பேராசிரியராகவும், மலட்டுத் தன்மை பற்றிய ஆராய்ச்சியாளராகவும் உலகப் புகழ் பெற்றவர். இவர் டாக்டர் கோ. இராமநாதனுடன் இணைந்து எழுதிய "மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ராஜசேகரன்&oldid=2765755" இலிருந்து மீள்விக்கப்பட்டது