2022 ஆம் ஆண்டு சந்திராபூர் டேங்கர் சுமையுந்து விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி அதிகாலையில், இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலத்தின் சந்திரபூர் அருகே அசய்பூருக்கு அருகில் மரக் கட்டைகளை ஏற்றிச் சென்ற மற்றொரு டிரக் மீது எரிபொருள் டேங்கர் சுமையுந்து மோதியது.[1] இதைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

இந்த விபத்து வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் சந்திரபூர்-முல் சாலையில் நடந்தது. பலியானவர்களின் உடல்கள் சந்திரபூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "9 People Charred To Death As Fire Breaks Out After Tanker-Truck Collision In Maharashtra's Chandrapur". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  2. "Nine Charred to Death as Fire Breaks Out After Tanker-truck Collision in Maharashtra's Chandrapur". News18 (in ஆங்கிலம்). 2022-05-20. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.