வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், சுமார் 0.384 சதுர கிலோமீடர் பரப்பளவில் அமைந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்த இந்த இடம் 1977 ஆம் ஆண்டு சூன் மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[1] இங்குள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாய்க்கு, உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகையான சுமார் 8000 வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வருகின்றன.