விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 5, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமா 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சு ஒரே கடியிலேயே ஒரு மனிதனை கொல்லவல்லது.


பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரவேலருக்கு கொடுக்கப்பட்டது. கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் யாத்திராகமம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்பயிகை என்ற பதத்தை பாவிக்கிறது. கடவுளை விசுவாசி, அவர் திருப்பெயரை வீணாக உச்சரிக்காதே, அவர் திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதே, பெற்ரோரைக் கனம்பண்ணு, கொலை செய்யாதே, மோக பாவம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி செல்லோதே, பிறர் மனையை விரும்பாதே, பிறர் உடைமையை விரும்பாதே ஆகியவை அப் பத்துக் கட்டளைகள் ஆகும்.