விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 14, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக் கண்டுபிடித்தவர் சகதீசு சந்திர போசு (படம்).
  • ஒளியிழையியலின் தந்தை” என்று பொதுவாக அழைக்கப்படுபவர் நாரிந்தர் கப்பானி.
  • தமிழ்ச் சிற்பப்பாட்டு என்றழைக்கப்படும நூல் நெடுநல்வாடை. இதை இயற்றியவர் நக்கீரர். இது அகப்பொருள் பற்றி பேசினாலும் புறப்பொருள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.
  • கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறத்திலிருக்கும். காரணம் சிவப்பு நிறமி ஹீமோகுளோபின் இல்லை.
  • கண்பார்வை இல்லாதவர்களுக்கும் கனவு வரும். பிறவியிலேயே பார்வையற்றவர்களுக்கு கருப்பு வெள்ளைக் கனவுகள் தான் வரும்.
  • யூ எசு பி (படம்) எனப்படும் பல்தொடர் இணைப்பியைக் கண்டுபிடித்தவர் இன்டெல் நிறுவனத்தின் அஜய் பட்.
  • உலகிலேயே மிக உயரமாக வளரக் கூடிய புல் மூங்கில் ஆகும்.
  • இந்திய மொழிகளில் முதன்முதலாக அச்சில் ஏறிய மொழி தமிழ் மொழி ஆகும். அச்சடிக்கப்பட்ட நூல் விவிலியம்.