மொகாலா-மன்பூர்-அம்பாக் சௌகி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொகல்லா-மன்பூர்-அம்பாக் சௌக்கி மாவட்டம் (Mohla-Manpur-Ambagarh Chowki), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் 29வது மாவட்டமாக 9 செப்டம்பர் 2022 (வெள்ளிக் கிழமை) அன்று முதலமைச்சர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்தார். பெரிய மாவட்டமான ராஜ்நாந்துகாவ் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1][2][3]

சத்தீஸ்கர் மாநிலத்தின் 33வது புதிய மாவட்டமான கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டத்தை 9 செப்டம்பர் 2022 அன்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் துவக்கி வைத்தார்.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2 இலட்சத்தி 14,667 எக்டேர் பரப்பள்வு கொண்ட மொகல்லா-மன்பூர்-அம்பாக் சௌக்கி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,83,947 ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடியினர் 1,79,662 ஆக உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

மூன்று வருவாய் வட்டங்களையும், 13 குறுவட்டங்களையும், மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும், 185 கிராம ஊராட்சிகளையும், 499 கிராமங்களையும் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]