மூகாம்பிகை பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூகாம்பிகை பொறியியல் கல்லூரி
வகைதனியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி
உருவாக்கம்1985[1]
அமைவிடம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.mookambigai.ac.in

மூகாம்பிகை பொறியியல் கல்லூரி என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர் என்னும் இடத்தில் உள்ள அரசு உதவிபெறாத ஒரு தனியார் பொறியியல் கல்லூரி.[2] இது புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (எண்: 336) கீரனூர் அருகில் புதுக்கோட்டையிலிருந்து இருபத்தெட்டு (28) கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவுபெற்றுச் செயல்படுகிறது. இதன் நிறுவனத்தலைவராக எஸ். சுப்ரமணியனும், தலைவராக எஸ். உமாவும் உள்ளனர்.

1985-ஆம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் கல்வி, சுகாதார மற்றும் அறக்கட்டளையின் கீழ் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைமையகம் திருச்சி உறையூரில் உள்ளது. தெலுங்கு சிறுபான்மை இனத்தவர் மேலாண்மை செய்யும் இக்கல்லூரியில் குடிசார் பொறியியல், இயந்திரப் பொறியியல், தானுந்துப் பொறியியல், மின்னணுப் பொறியியல், மின்பொறியியல், மின்னணுவியல் மற்றும் அளவீட்டுகருவிப் பொறியியல், கணினியிய பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட எட்டு துறைகள் செயல்பட்டுவருகின்றன. ஒரு ஆண்டில் ஐந்நூறு (500) மாணவர்களுக்குப் பயனளிக்கும் இக்கல்லூரி 200 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "Mookambigai College Of Engineering, Pudukkottai". collegedunia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
  2. "Mookambigai College of Engineering (MCE), Pudukkottai". .jagranjosh.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.

வெளியிணைப்புகள்[தொகு]