முகைதீன் சாசையத் அப்துல் காதர் சிலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முகைதீன் சாசையத் அப்துல் காதர் சிலானி (1077 - 1165) ஈராக்கில் உள்ள சிலான் என்ற ஊரில் பிறந்தவர் ஆவார். இவரின் தந்தையார் பெயர் அசரத் அபுசாலே ஆகும். தாயார் பெயர் உம்மத்துல் கயா பாத்திமா ஆகும். இவர் தமது பதினெட்டாம் வயதில் பாக்தாது வந்தார். அப்போது அங்கு, அரசனாக இருந்து, சிறப்பாக ஆட்சி நடத்தியவர் அல் முசு தந்சித் பில்லா அபுல் முசபர் யூசுப்-பின் அல் முக்தசி அல் அப்பாசி ஆகும்.

இவர் பாக்தாதின் பெயர்பெற்ற அறிஞர்களிடம் கல்வி பயின்றார். இவர் அபுல் கயாஅம்மாத் பின் முசுலிம் பின், துர்த்துல் அப்பாசு அவர்களின் சீடர் ஆனார். அன்று தலைசிறந்து விளங்கிய சா அபு யாக்கூப் யூசுப் பின் அயூப் அல் அமதானி அல் சாகித் என்ற ஆசானைச் சார்ந்து இறையின் உட்பொருளை உணர்ந்தார்.

இசுலாம் மறை வளர்ச்சிக்காக உண்டான நான்கு பிரிவுகளில் ஒன்றான காதிரியா என்ற பிரிவை இவரே தோற்றுவித்தவர் ஆவார். இந்த இறையியல் அறிஞர் பாக்தாது நகரிலேயே காலமானார். இந்த அறிஞரின் கல்லறையை இன்றும் ஈராக்கிய மக்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

பொருளடக்கம்

[தொகு] காதிரியா

இசுலாத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றாக, காதிரியா(Qadiriyya) கருதப்படுகிறது.

[தொகு] காட்சியகம்

[தொகு] புற இணைப்புகள்


[தொகு] இயற்றியவை

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்