பேச்சு:திருவள்ளுவர் சிலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவள்ளுவர் சிலை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


காமத்துப்பால்[தொகு]

காமத்துப்பால் என்பதே சரி; இன்பத்துப்பால் என்பது பிழை. வள்ளுவப்பெருந்தகை 'காமம்' / 'இன்பம்' என்ற இரண்டு சொற்களையும் கையாளுகின்றார். 'காமத்துப்பால்' என்பதுதான் அவரின் சொல்லாட்சி; 'இன்பத்துப்பால்' என்பது அன்று! ஏதோ புதிதாகச் சொல்லவேண்டும் அல்லது விளங்காது படிப்பவர்களுக்கு என இவர்களாகவே நினைத்துக்கொண்டு மனம்போன போக்கில் பலரும் பலவிதமாக எழுதுகின்றார்கள். ஆனால், நாம் வள்ளுவர் சொல்லாட்சியையே மேற்கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. 'காமம்' என்ற சொல் புரியாது என்றால் அதனைப்புரிய வைப்போம்; அடுத்து, அவர்கள் எப்பொழுதுதான் புரிந்துகொள்வது? இரண்டு, மூன்று முறைகள் படித்தால் புரிந்து வி்ட்டுப்போகின்றது. சொற்களைச் சரியாகக் கையாள்வது மிகமிக முக்கியம்.--Meykandan 03:10, 16 மே 2010 (UTC)[பதிலளி]

"அய்யன்" என்று திருவள்ளுவர் பெயர் முன் சேர்த்துள்ளது சரியா?--கார்த்திக் 15:55, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

திருவள்ளுவர் சிலை என்றே வைக்கலாம். அய்யன் தேவையற்றது. --இராஜ்குமார் 16:45, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
தமிழ்நாடு அரசு இந்தத் திருவள்ளுவர் சிலையை அய்யன் திருவள்ளுவர் சிலை என்றுதான் தனது பதிவேடுகள் அனைத்திலும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் தலைப்பை திருவள்ளுவர் சிலை என மாற்றம் செய்து கொள்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. மேலும் திருவள்ளுவர் சிலை என்ற தலைப்பில் இக்கட்டுரைச் செய்திகள் இருப்பதால் அந்தக் கட்டுரையுடன் இதை இணைப்பதிலும் எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. --தேனி.எம்.சுப்பிரமணி. 01:36, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
இரண்டு கட்டுரைகளையும் இணைத்திருக்கிறேன். அதிகாரபூர்வமாக "அய்யன் திருவள்ளுவர் சிலை" என்று பதிவேடுகளில் இருந்தால் அதனையே தலைப்பாக வைக்கலாம்.--Kanags \உரையாடுக 11:28, 4 ஆகஸ்ட் 2010 (UTC)