பிலிப்பைன் போர்த்தொடர் (1944–45)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப்பீனியப் போர்த்தொடர்
இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போர்முனை பகுதி

தளபதி டக்ளசு மகார்த்தர், தலைவர் செர்ஜியோ ஓசுமெனா, மற்றும் வீரர்கள் பெலோவில் அக்டோபர் 20, 1944இல் இறங்குதல்.
நாள் அக்டோபர் 20, 1944 – ஆகத்து 15, 1945
இடம் பிலிப்பீன்சு
முடிவான நேசப்படைகள் வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா

 ஆத்திரேலியா
 மெக்சிக்கோ
 ஐக்கிய இராச்சியம்

 சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா டக்ளசு மக்கார்த்தர்
ஐக்கிய அமெரிக்கா செஸ்டர் நிமிட்சு
ஐக்கிய அமெரிக்கா வால்டர் குருக்கெர்
ஐக்கிய அமெரிக்கா வில்லியம் அல்சே, இளை.]]
ஐக்கிய அமெரிக்கா தாமசு சி. கின்கைடு
ஐக்கிய அமெரிக்கா ஜார்ஜ் சி. கென்னெ
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Commonwealth of the Philippines செர்ஜியோ ஓசுமெனா
சப்பான் டோமோயுக்கி யமஷிட்டா

சப்பான் சோமு டொயோடா
சப்பான் டேக்கோ குரிட்டா
சப்பான் ஜிசாபுரோ ஓசுவா
சப்பான் இவாபுச்சி சஞ்சி †

இழப்புகள்
14,000 மரணம்,
48,000 காயம்
336,000 மரணம்,
12,000 சிறைபிடிப்பு

பிலிப்பீனியப் போர்த்தொடர், 1944-45 (Philippines campaign of 1944–1945, OPERATION MUSKETEER I, II, and III) அல்லது பிலிப்பீனியப் போர் 1944–1945, அல்லது பிலிப்பீனிய விடுவிப்பு, இரண்டாம் உலகப் போரின் போது பிலிப்பீன்சை ஆக்கிரமித்திருந்த ஏகாதிபத்திய சப்பானியப் படைகளை அமெரிக்கர்களும் பிலிப்பினோக்களும் இணைந்து வெற்றி கண்டு வெளியேற்றிய நிகழ்வாகும். 1942ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆதிக்கவாத சப்பானியப் படைகள் பிலிப்பீன்சை முழுமையாக கையகப்படுத்தியிருந்தன. அக்டோபர் 20, 1944இல் பிலிப்பீனியத் தீவான லெய்ட்டில் தரை,கடல் இருவழியிலும் செல்லக்கூடிய படைகளின் இறக்கமே பிலிப்பீன்சின் விடுதலை போரின் துவக்கமாக அமைந்தது; இதனைத் தொடர்ந்து உலகப்போரின் இறுதிவரை, ஆகத்து 1945 வரை, தொடர்ந்து சண்டைகள் பல்வேறு பகுதிகளில் நடந்தன.