பண்டுவ மனவதர் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
பண்டுவ-மனவதர் இராச்சியம்
சுதேச சமஸ்தானம்
1733–1947

Flag of

கொடி

வரலாறு
 •  நிறுவப்பட்டது 1733
 •  இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1947
பரப்பு
 •  1941 261.6 km2 (101 sq mi)
Population
 •  1941 26,209 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
பண்டுவ-மனவதர் ஆண்கள் துடுப்பாட்ட அணியினர், சிட்னி, ஆண்டு, சூன் 1938

பண்டுவ-மானவதர் இராச்சியம் (Bantva-Manavadar or Manavadar State) 1947-இல் இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் இருந்தது. 1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பண்டுவ-மனவதர் இராச்சியம் 261.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 26,200 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

வரலாறு[தொகு]

1733-ஆம் ஆண்டில் பண்டுவ-மனவதர் இராச்சியத்தை நிறுவியவர் பஷ்தூன் இன திலேர் கான் சலாபாத் கான் ஆவார். 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பண்டுவ-மானவதர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பண்டுவ-மானவதர் இராச்சியம், 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய சௌராஷ்டிர மாநிலத்துடன் இணக்கப்பட்டது. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பண்டுவ-மான்வதர் இராச்சியம் 1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்[தொகு]

பண்டுவ-மானவதர் இராச்சியத்தின் ஆட்சியாளர் பாபி குடும்ப மரம் (1884)

பஷ்தூன் இன பாண்டுவ-மானவதர் ஆட்சியாளர்கள் இராச்சியத்தை கான் பட்டத்துடன் ஆட்சி செய்தனர்.[1]

கான்கள்[தொகு]

  • 1733 – c.1760 திலேர் கான் சலாபாத் கான் (இறப்பு:1760)
  • 1760 – .... சதர் நத்து கான் திலேர் கான்
  • 17.. – 18.. காசாபர் கான் நத்துக் கான்
  • 18.. – 18.. கமல் அத்-தீன் காசாபர் கான்
  • 18.. – 12 சூன் 1882 சோராவர் கான் கமல் அத்தீன் கான் (இ. 1882)
  • 12 சூன் 1882 – 28 மார்ச் 1888 காசாபர் கான் சோராவர் கான் (பிறப்பு:. 1862 – இறப்பு. 1888)
  • 12 சூன் 1882 – 21 சூன் 1883 .... -அரசப்பிரதிநிதி
  • 28 மார்ச் 1888 – 19 அக்டோபர் 1918 பாத் அத்தீன் கான் காசாபர் கான் (பி. 1885 – இ. 1918)
  • 28 மார்ச் 1888 – 25 நவம்பர் 1907 .... -அரசப்பிரதிநிதி
  • 19 அக்டோபர் 1918 – 15 பிப்ரவரி 1948 குலாம் மொகிதீன் கான் (பி. 1911 – இ. 2003)
  • 19 அக்டோபர் 1918 – 21 நவம்பர் 1931 பாத்திமா சித்திக்கா பேகம் (பெண்) -அரசப்பிரதிநிதி (பி. 1891 – இ. 1943)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manavadar". Genealogical Gleanings. Soszynski, Henry. University of Queensland. பார்க்கப்பட்ட நாள் 2010-04-12.

வெளி இணைப்புகள்[தொகு]

This article incorporates text from a publication now in the public domain: Gazetteer of the Bombay Presidency: Kathiawar. Vol. VIII. Printed at the Government Central Press, Bombay. 1884. pp. 377–378.