நெல்லை புத்தகத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல்லை புத்தகத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடத்தப்பெறும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், புத்தகப் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்த தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து இப்புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. இப்புத்தகக் கண்காட்சி நெல்லை புத்தகக் கண்காட்சி எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறது.

கண்காட்சி அரங்குகள்[தொகு]

இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. பத்து நாட்கள் நடத்தப்படும் இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படுகிறது.

சிறப்பு சொற்பொழிவுகள்[தொகு]

இக்கண்காட்சியில் மாலை 5. 00 மணிக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம் பெறுகின்றன.

கண்காட்சிகள்[தொகு]

  • 2013 ஆம் ஆண்டில் நெல்லை புத்தகத் திருவிழா ஜூன் 14 முதல் ஜூன் 23 வரை பத்து நாட்கள் நடைபெற்றது.
  • 2014 ஆம் ஆண்டில் நெல்லை புத்தகத் திருவிழா ஜூலை 18 முதல் ஜூலை 27 வரை பத்து நாட்கள் நடைபெற்றது.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]