நீலப்பாடி நாகநாதசுவாமி கோயில்
நீலப்பாடி நாகநாதசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்[தொகு]
இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 9 கிமீ தொலைவில், சாலையின் வடப்புறத்தில் சற்றே ஒதுங்கிய நிலையில் உள்ளது.[1]
இறைவன், இறைவி[தொகு]
இங்குள்ள இறைவன் நாகநாதசுவாமி, இறைவி சௌந்தரநாயகி.வசிஷ்டர், விசுவாமித்திரர், நாரதர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.[1]
அமைப்பு[தொகு]
அஷ்டபுஜ துர்க்கை சன்னதி இக்கோயிலில் உள்ளது. கருடனுக்கும் பாம்புக்கும் பகை என்று கூறப்பட்டாலும் இருவரும் ஒரே இடத்தில் இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்ற அதிசயத்தைப் பெற்ற பெருமையுடையது இக்கோயிலாகும்.[1]