த. சதீஷ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. சதீஷ்குமார் (பிறப்பு: சூன் 18, 1965 என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு எனும் ஊரைச் சேர்ந்த இவர் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர் பட்டம் பெற்றவர். தற்போது திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சித்த மருந்தகத்தில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய “புற்றுநோயும் சித்த மருத்துவமும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._சதீஷ்குமார்&oldid=3614058" இலிருந்து மீள்விக்கப்பட்டது