திரிப்ரையார் ஸ்ரீ ராமர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிப்ரையார் ஸ்ரீ ராமர் கோவில் இந்தியாவில், கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், தென்மேற்கு பாகத்தில் அமைந்திருக்கும் திரிப்ரையார் என்ற ஒரு நகரத்தில் அமைந்துள்ள ஒரு இராமர் கோயில்.

வரலாறு[தொகு]

இதிகாச புராணங்கள் படி, விஷ்ணுவைப் போல் காணப்படும் ஸ்ரீ ராமர், இலட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னரின் விக்ரகங்கள் ஆற்றில் ஒழுகி வந்து கரை சேர்ந்தன, இந்த விக்ரகங்கள் முறையாக த்ரிப்ரையார், திருமூழிக்களம், கூடல்மாணிக்கம் மற்றும் பாயம்மெல் போன்ற இடங்களில் நடுவாழியாக இருந்து செயல்பட்ட உள்ளூர் தலைவர் வக்கெல் கைமால் என்பவர், சம்பந்தப்பட்ட இடங்களிலுள்ள திருக்கோவில்களில் பிரதிட்டை செய்தார். வக்கெல் கொவிலகத்தின் வம்சாவளிகள் தெற்கே இடம் பெயர்ந்து நிராணம் (துடங்கியில்) மற்றும் தளவாடி (செருச்சேரி மடம்) எனும் இடங்களில் குடி புகுந்தனர். மேலும் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத கமலங்களை அடைவதற்காக திரிபாலேச்வரரை (பரமசிவனை) வழிபட்டு வந்தனர். கோவில் பாதுகாப்பாளராக செயல் புரிந்த தச்சுடைய கைமால், இரிஞ்சாலக்குடையில் வசித்து வந்தார். ஒரே நாளில் இந்த நான்கு தெய்வங்களையும் கண்டு வழிபடுவதால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.

இங்கே அமைந்திருக்கும் விக்ரகம் நான்கு கைகளுடன் கூடிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் உடையதாகும். (சதுர்புஜ விஷ்ணு) மற்றும் ஸ்ரீ ராமர் கரா என்ற அரக்கனை போரில் வென்றதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த மூலவரில் பிரம்மா மற்றும் பரமசிவரின் அம்சங்களும் அடங்கியுள்ளதால், இறைவனை த்ரிமூர்த்தியாகவும் மக்கள் போற்றுகின்றனர். இந்தக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அய்யன் ஐயப்ப சுவாமியின் கோவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்தக் கோவிலில் முக்கியமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான பூரம் திருவிழா (மலையாள வழக்கப்படி மீனம் மாதத்தில் கொண்டாடப்படுவது) மற்றும் இன்னொன்று ஏகாதசித் திருவிழா ஆகும். (இது நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது). இந்தக் கோவிலில் மீனூட்டு (மீன்களுக்கு உணவு அளித்தல்) என்ற மிகவும் பிரபலமான வழிபாட்டு முறை (நேர்த்திக்கடன்) புழக்கத்தில் இருந்து வருகிறது, அதன் படி, பக்தர்கள் இங்கிருக்கும் நதிக்கரையில், கோவிலின் எல்லையில் காணப்படுவது, மீன்களுக்கு அரசி தானியங்களை வழங்குவார்கள்.

அங்கு எப்படி செல்வது?[தொகு]

திரிச்சூரிலிருந்து சாலை வழியாக எளிதாக திரிப்ரையார் வந்தடையலாம் மேலும் திருச்சூரில் ஒரு தொடருந்து நிலையமும் உள்ளது. இது கொச்சியில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குறிப்புதவிகள்[தொகு]