சுவ்ரா முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவ்ரா முகர்ஜி
பிறப்புசுவ்ரா கோஷ்
இறப்புஆகத்து 18, 2015(2015-08-18) (அகவை 74)
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், ஓவியர், பாடகர்
வாழ்க்கைத்
துணை
பிரணப் முகர்ஜி
பிள்ளைகள்மகன்கள் (அபிஜித்,
இந்திரஜித்) மகள் (சர்மிஷ்டா)

சுவ்ரா முகர்ஜி (Suvra Mukherjee, 17 அக்டோபர் 1940 - 18 ஆகத்து 2015) இந்திய எழுத்தாளரும், ஓவியரும், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் துணைவியும் ஆவார். இதனால் இவர் இந்தியாவின் முதல் சீமாட்டி ஆவார்.

பிறப்பும், வாழ்க்கையும்[தொகு]

சுவரா முகர்ஜி தற்போதய வங்கதேசத்தின், ஜெஸ்சார் என்ற பகுதியில் 1940 இல் பிறந்தார். அவருக்கு பத்து வயதாக இருந்தபோது அவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது. 1957 சூலை, 13இல் பிரணப் முகர்ஜிக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது.[1] இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித், இரு மகன்களும், சர்மிஷ்டா என்ற மகளும் உள்ளனர். அபிஜித் மேற்கு வங்காளம், ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியின் இந்திய தேசிய காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

பணிகள்[தொகு]

இரவீந்திரநாத் தாகூரின் இரசிகையான சுவ்ரா ஒரு பாடகியாக செயற்பட்டார்.[2] கீதாஞ்சலி ட்ரூப் என்ற பெயரில் தாகூரின் பாடல்களையும், கவிதைகளையும் பல்வேறு நிகழ்ச்சிகளாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அரங்கேற்றினார். ஒரு ஓவியராக சிலருடன் சேர்ந்தும், தனியாகவும் ஒவியக் கண்காட்சிகளும் நடத்தினார்.

நூல்கள்[தொகு]

  • முன்னாள் பிரதமர் இந்திராவுடன் மேற்கொண்ட நேர்காணல்களை சோக்கர் அலேய் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார்.
  • சீன சுற்றுப் பயணத்தை சேனா அசெனாய் சின் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.[3]

இறப்பு[தொகு]

சுவாசக் கோளாறு காரணமாக அகத்து 18, 2015 ஆம் ஆண்டு காலை 10.51 மணிக்கு டெல்லியில் மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவ்ரா_முகர்ஜி&oldid=3894389" இலிருந்து மீள்விக்கப்பட்டது