சிங்களாந்தபுரம்
| சிங்களாந்தபுரம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 10 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
சிங்களாந்தபுரம் (ஆங்கிலம்: Singalandapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இங்கு வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,422 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 5345 ஆண்கள், 5077 பெண்கள் ஆவார்கள். இதில் மக்களின் சராசரி கல்வியறிவு 61.53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிங்களாந்தபுரம் மக்கள் தொகையில் 11.78% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] வரலாறு
சிங்கள்ளன் என்ற பெயருடைய அரசர் இவ்வூரை ஆட்சி செய்ததால் இவ்வூருக்கு சிங்களாந்தபுரம் என்னும் பெயர் ஏற்பட்டது [ஆதாரம் தேவை]. சிங்களாந்தபுரம் நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது[ஆதாரம் தேவை].
[தொகு] புவியியல்
சிங்களாந்தபுரத்தில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 39.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 16.8˚ செல்சியஸ்.இவ்வூரின் அமைவிடம் 11°25'3"N 78°13'18"E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (805அடி) உயரத்தில் இருக்கின்றது.
[தொகு] பருவமழை
தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடமேற்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சிங்களாந்தபுரத்தில் வருடத்திற்கு சுமார் 1800 மி.மீ மழை பெய்கிறது[சான்று தேவை].சிங்களாந்தபுரத்தில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. ஏற்காடு சிங்களாந்தபுரத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கொல்லிமலை சிங்களாந்தபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
[தொகு] கலாசாரம்
சிங்களாந்தபுரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சிங்களாந்தபுரத்தின் கலாசாரம் விளங்குகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.சிங்களாந்தபுரத்தில் வருடந்தோறும் (10-11) மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சிங்களாந்தபுரத்தில் பல இடங்களில் சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன[ஆதாரம் தேவை].
[தொகு] போக்குவரத்து
சிங்களாந்தபுரம் நகரிலிருந்து மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. சிங்களாந்தபுரத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது
[தொகு] தொலைபேசி நிறுவனங்கள்
இங்கு பி.எஸ்.என்.எல், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. மற்ற இந்திய நகரங்களைப் போல சிங்களாந்தபுரத்திலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும்.
[தொகு] பள்ளி௧ள்
- அரசினர் மேல்நிலை பள்ளி, சிங்களாந்தபுரம்
- ஊராட்சி தொடக்௧ பள்ளி, சிங்களாந்தபுரம்
- நேசனல் மெட்ரிகுலேசன் பள்ளி, சிங்களாந்தபுரம்
[தொகு] அலுவலகங்கள்
- ஊராட்சி அலுவலகம்
- தமிழ்நாடு மின்வாரியதுறை, உதவிபொறியாளர், அலுவலகம்
- அஞ்சல் அலுவலகம்
[தொகு] கோவில்கள்
- மாரியம்மன் கோவில்
- அம்மன் கோவில்
- காளி அம்மன் கோவில்
- திருவேசுவரர் கோவில்
- கற்புரநாரயணன் கோவில்
- அண்ணமார் கோவில்
- வேட்டைகாரசாமி கோவில்
- பெரியசாமி கோவில்
- பச்சையம்மன் கோவில்
- கருப்பண்ணசாமி கோவில்
- எட்டுக்கை அம்மன் கோவில்
- பிள்ளையார் கோவில்
- செளடேசுவரி அம்மன் கோவில்
[தொகு] வங்கிகள்
- கார்பரேசன் வங்கி (தொலைபேசி: 04287-253426, 222857)
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
[தொகு] ஆதாரங்கள்
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - - Namakkal District;Rasipuram Taluk;Singalandapuram Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை