சிகாமட் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 2°30′25″N 102°48′51″E / 2.50698°N 102.81412°E / 2.50698; 102.81412
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிகாமட் தொடருந்து நிலையம்
Segamat Railway Station
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
சிகாமட் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சிகாமட், சிகாமட் மாவட்டம் ஜொகூர்
ஆள்கூறுகள்2°30′25″N 102°48′51″E / 2.50698°N 102.81412°E / 2.50698; 102.81412
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்உள்ளூர் போக்குவரத்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட, இரட்டை வழித்தடம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைமின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் புதிய நிலையம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் காரணங்களால் இன்னும் திறக்கப்படவில்லை.
வரலாறு
திறக்கப்பட்டது1909
திறந்ததுசூலை 2023
மூடப்பட்டது28 ஏப்ரல் 2021 (2021-04-28) (பழைய நிலையம்)
மறுநிர்மாணம்1 சூன் 2023 (2023-06-01) (திறக்கப்படவில்லை)
மின்சாரமயம்உண்டு
சேவைகள்
முந்தைய நிலையம்   சிகாமட்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
கிம்மாஸ்
<<<
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
குளுவாங்
>>>
ஜொகூர் பாரு
கிம்மாஸ்
<<<
(முடிவிடம்)
 
 Ekspres Selatan 
தெற்கு நகரிடை சேவை
 
லாபீஸ்
>>>
ஜொகூர் பாரு
அமைவிடம்
Map
சிகாமட் தொடருந்து நிலையம்

சிகாமட் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Segamat Railway Station மலாய்: Stesen Keretapi Segamat); சீனம்: 昔加末火车站) என்பது தீபகற்ப மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சிகாமட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிகாமட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.

தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) முக்கிய நிலையங்களில் ஒன்றான சிகாமட் நிலையம் 1909-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கியது. ஜொகூர் மாநிலத் தலைநகர் ஜொகூர் பாரு நகரத்தில் இருந்து 172 கி.மீ. வடக்கே உள்ளது.

பொது[தொகு]

இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்து சேவைகளையும் வழங்குகிறது. இந்த தொடருந்து நிலையத்தை ஒட்டி பேருந்து மற்றும் வாடகை வாகனங்களின் முனையமும் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்த நிலையம் முதன்முதலில் 1909-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1924-ஆம் ஆண்டில், அதே இடத்தில் ஒரு பெரிய கட்டிடத்துடன் இந்த நிலையத்தின் தலைமைக் கட்டிடம் புனரமைப்பு செய்யப்பட்டது.

இருப்பினும் இந்த நிலையம் 28 ஏப்ரல் 2021-இல் தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது; அத்துடன் தற்காலிகமாக 3.7 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்ட சிகாமட் தற்காலிக தொடருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

கிம்மாஸ்-ஜொகூர் பாரு இரட்டை கண்காணிப்பு மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் (Gemas-Johor Bahru Double Tracking and Electrification Project) ஒரு பகுதியாக, தற்போது ஒரு புதிய நிலையம் கட்டப் படுவதால் பழைய நிலையம் விரைவில் இடிக்கப்படலாம் என்றும் அறியப்படுகிறது.[1]

புதிய நிலையம்[தொகு]

ஜூன் 2023 நிலவரப்படி, புதிய நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. தற்போது நிலையம் உள் மற்றும் வெளிப்புற விளக்கு அமைப்பு, பயணிகள் அறிவிப்பு அமைப்பு, தகவல் அமைப்பு மற்றும் சமிக்ஞை அமைப்பு ஆகியவற்றிற்காக சோதிக்கப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், தற்போது மின்மயமாக்கப்பட்ட இரட்டைப் பாதை திட்டத்தின் ஒப்பீட்டளவில் மெதுவான முன்னேற்றம் காரணமாக, புதிய நிலையத்தின் திறப்புவிழா ஜூலை 2023 வரை தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுவட்டார இடங்கள்[தொகு]

  • சிகாமட் மாவட்ட தகவல் அலுவலகம் (Segamat District Information Office)
  • கிலோமீட்டர் 0 (KM0) சிகாமட் நினைவுச்சின்னம் (Kilometre Zero (KM0) Monument of Segamat)
  • சிகாமட் வட்டச்சுற்று வழி (Segamat Roundabout)
  • சிகாமட் பேருந்து முனையம் (Segamat Bus Terminal)
  • சிகாமட் வாடகை உந்து வண்டி முனையம் (Segamat Taxi Terminal)
  • சிகாமட் பெரும் சந்தை (Segamat Bazaar)
  • சிகாமட் மத்திய கடைவளாகம் (Segamat Central Mall)

சிகாமட் நகரம்[தொகு]

சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்; ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாருவில் இருந்து 172 கி.மீ. வடக்கே உள்ளது. நெகிரி செம்பிலான், பகாங் ஆகியவை இந்த நகரத்தின் எல்லை மாநிலங்களாக அமைந்துள்ளன.[2]

இந்த நகரம் வேளாண்மைத் தொழிலைச் சார்ந்த நகரம் ஆகும். சுற்றியுள்ள நிலப் பகுதிகளில் (இ)ரப்பர், செம்பனை உற்பத்தி செய்யப் படுகின்றன. டுரியான் எனும் முள்நாறிப் பழத்திற்கு இந்த நகரம் பெயர் போனது.

கோலாலம்பூர், ஜொகூர் பாரு, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநகரங்களுக்கும் நடு மையத்தில் சிகாமட் நகரம் அமைந்து இருக்கிறது. சிகாமட் மாவட்டத்தின் பொருளாதார முன்னோடியாக விளங்குவது வேளாண்மை. சிகாமட் மாவட்ட மக்களில் 61.8 விழுக்காட்டினர் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர்; தொழில் துறையில் 13.1 விழுக்காட்டினரும் அரசாங்கப் பணிகளில் 12.2 விழுக்காட்டினரும் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]