க. லோகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. லோகநாதன் (பிறப்பு: பிப்ரவரி 8 1934) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், க. ரா. அறிவழகன் எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்டவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார். ==எழுத்துத் துறை ஈடுபாடு 1952 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்[தொகு]

  • "கவியரங்கக் கவிதைகள்" (1997)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • "தமிழ் மணி" "புலவர்" பட்டங்கள்
  • தொக்கொ குரு (1989)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பதக்கமும் பணமுடிப்பும் (1985)
  • தங்கப் பதக்கம் (1991)
  • அரசாங்கத்தின் PJK விருது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._லோகநாதன்&oldid=3237555" இலிருந்து மீள்விக்கப்பட்டது