குருமாத்தூர் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருமாத்தூர் கல்வெட்டு
செய்பொருள்கருங்கல்
எழுத்துபல்லவ கிரந்தம்
உருவாக்கம்கி.பி.9ஆம் நூற்றாண்டு (24 மே, கி.பி. 871)
தற்போதைய இடம்கேரளம், ஆரீகோட் அருகில் உள்ள குருமாத்தூர் விஷ்ணு கோயில்

குருமாத்தூர் கல்வெட்டு (Kurumathur inscription (கி.பி 9 ஆம் நூற்றாண்டு) என்பது வட கேரளத்தில் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்ட ஒரு சமசுகிருத கல்வெட்டாகும். இது ஆரியகோடின் தெற்கில் உள்ள குருமாத்தூர் விஷ்ணு கோவிலைப் புதுப்பிக்கும் போது அகழ்வாய்வில் 2011 பெப்ரவரி மாதம், கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டானது ஒரு கருங்கற்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.[1][2][நம்பகத்தகுந்த மேற்கோள்?]

அரியக்கோடானது காளியாறின் தென் கரையில், கரிக்கட்டின் வடமேற்கில் அமைந்துள்ளது. இது கேரளாள்பதியில் குறிப்படப்பட்டுள்ள 32 பிராமணக் குடியேற்றங்களில் ஒன்றாகும்.

இந்தக் கல்வெட்டானது பின்வரும் தகவல்களை அளிக்கிறது

  • அளவு: முன்று பத்திகள்
  • ஆட்சியில் இருந்த மன்னரின் பெயர்: "இராம இராஜசேகரன்"
  • நாள்: கி.பி. 871 மே 24
  • உள்ளடக்கம்:
    • "அரசன் இராம இராஜசேகரனின் புகழானது பெருங்கல் முழுவதும் பரவியுள்ளது"
    • "இந்த இராஜசேகர மன்னன் இராமர் பிறந்த புகழ்பெற்ற இசுவாகு மரபில் பிறந்தவர்."[1]
    • "நாட்டை மனு நீதி தவறாமல் ஆட்சிசெய்பவர்"[1]
    • "இவரது நீதியான ஆட்சியில் பிராமணர்களுக்கு 12 கோயில் குளங்களை வெட்டியும் விஷ்ணுவின் சிலையும் நிறுவப்பட்டது"[1][2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 INDIAN ARCHAEOLOGY 2010-2011 – A REVIEW PUBLISHED BY THE DIRECTOR GENERAL ARCHAEOLOGICAL SURVEY OF INDIA. JANPATH, NEW DELHI-110011, 2016
  2. 2.0 2.1 Naha, Abdul Latheef. Ancient inscription throws new light on Chera history. February 11, 2011 தி இந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருமாத்தூர்_கல்வெட்டு&oldid=2727502" இலிருந்து மீள்விக்கப்பட்டது