இரா. சபாபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. சபாபதி (பிறப்பு: மார்ச் 19, 1958) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் இதழ்களில் விளம்பர உத்திகள் எனும் நூலினை எழுதியுள்ளார். இவர் முனைவர் ச. ஈஸ்வரன் என்பவருடன் சேர்ந்து எழுதிய "இதழியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல், தகவல் தொடர்புஎனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சபாபதி&oldid=3055546" இலிருந்து மீள்விக்கப்பட்டது