சந்திரயான்-1 இந்தியாவின் முதல் நிலாத் தேட்டம் ஆகும். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் 22 அக்டோபர் 2008 அன்று ஏவப்பட்டது, ஆகத்து 2009 வரை இயக்கப்பட்டது. இந்த பயணத்தில் ஒரு சந்திர சுற்றுப்பாதை மற்றும் ஒரு தாக்கம் ஆகியவை அடங்கும். சந்திரனை ஆராய்வதற்காக இந்தியா தனது சொந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து மேம்படுத்தியதால், இந்தப் பணி இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தது. இந்த விண்கலம் 8 நவம்பர் 2008 அன்று நிலா வட்டணையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது [3][4]
ஆர்பிட்டர் செயல்பாட்டு; தரையிறங்கும் இறுதி கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.
சந்திரயான்-2சத்தீசு தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து 22 ஜூலை 2019 அன்று பிற்பகல் 2.43 இசீநே (09:13 ஒபொநே) மணிக்கு புவி ஒத்தியங்கும் செயற்கைக்கோள் ஏவூர்தி மார்க் III (GSLV Mk III) மூலம் நிலாவுக்கு ஏவப்பட்டது. திட்டமிடப்பட்ட வட்டணை 169.7 புவியண்மையைக் கொண்டுள்ளது கிமீ மற்றும் 45475 புவிச்சேய்மை கி.மீ ஆகும். இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட நிலா சுற்றுகலன், தரையிறங்கி, தரையூர்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நிலவு நீரின் இருப்பிடம், கனிமப் ப்ரவலினை வரைபடமாக்குவதே முதன்மை அறிவியல் நோக்கமாகும்.
செவ்வாய் சுற்றுகலன் திட்டம்(எம்ஓஎம்) அல்லது மங்கள்யான்: இது 24 செப்டம்பர் 2014 முதல் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும் ஒரு விண்கலமாகும் . இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் ( இசுரோ) நவம்பர் 5, 2013 அன்று ஏவப்பட்டது. இது இந்தியாவின் முதல் கோள்களுக்கு இடையேயான திட்டமாகும், மேலும் சோவியத் விண்வெளி திட்டம் நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமைக்குப் பிறகு செவ்வாய்க் கோளை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனமாக இசுரோ மாறியுள்ளது. செவ்வாய் கோளின் வட்டணையை அடைந்த முதல் ஆசிய நாடு இந்தியா; முதல் முயற்சியிலேயே உலகிலேயே வெற்றிகண்ட முதல் நாடும் ஆகும்.[5][6]
வானியற் செயற்கைக்கோள் அல்லது ஆசுட்டிரோசாட் என்பது இசுரோவால் 28 செப்டம்பர் 2015 அன்று ஏவப்பட்ட முதல் இந்திய வானியல் செயற்கைக்கோள் முனைவுப்பணியாகும். இது X-கதிர், புற ஊதாக் கதிர் அலைப்பட்டைகளில் ஒரே நேரத்தில் வான் பொருட்கள், அண்டக்கதிர் வாயில்களின் பல அலைநீள நோக்கீடுகளை நிகழ்த்த ஏவிய விண்கல நோக்கீட்டகமாகும். இது சூரிய மைய வட்டணையில் 7 ஆண்டுகள் செயல்பட்டது.ஈதில் அஐந்த அறிவியல் கருவிகளாக, (3500–6000 Å. . . ), புற ஊதா (1300–op Å...), மென், வன் எக்சுக்கதிர் அணிகள் (0.5–8 கிஎவோ; 3–80 கிஎவோ). இதன் சிறப்பு, கட்புல, புற ஊதா, மென், வன் X-கதிர் பகுதிகள் என விரிவடையும் அதன் பரந்த கதிர்நிரல் நெடுக்கம் ஆகும்.[7]
ஆதித்யா-எல்-1 என்பது சூரிய ஒளிமுட்டுப்புறணி, வண்ணக்கோளம் அருகே புற ஊதாக் கருவியைப் பயன்படுத்திச் சூரிய ஒளிமுகட்டைப் படிக்கும் முதல் இந்தியக் கண்காணிப்பு வகைப் திட்டப்பணியாகும். எக்சுக்கதிர் கதிர்நிரல்பதிவுக் கருவிகள் சூரியத் தணல்வீச்சின் கதிர்நிரலை வழங்கும் அதே வேளையில் பிற அறிவியல் கருவிகள் சூரியனில் இருந்து புவிக்கு செல்லும்போது சூரிய நிகழ்வுகளை கவனிக்கிறது.[8]
எக்சுக் கதிர் முனைமை அளவி செயற்கைக்கோள்
2023 இரண்டாம் காலாண்டு
விண்வெளி ஆய்வகம்
எக்சுக் கதிர் முனைமை அளவி செயற்கைக்கோள்(-ray Polarimeter Satellite) ( எக்சுப்போசாட் ) என்பது அண்டவெளி எக்சுக்கதிர்களின் முனைமையை ஆய்வு செய்வதற்காக இசுரோ திட்டமிடப்பட்ட விண்வெளிக் கண்காணிப்புத் திட்டம் ஆகும். இது 2023 இல் ஒரு சிறிய செயற்கைக்கோள் ஏவூர்தியில் (SSLV) வழி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது; குறைந்தது ஐந்து ஆண்டுகள் இக்கலம் தன் சேவையை வழங்கும். துடிவிண்மீன்கள், கருந்துளை, எக்சுக்கதிர் இரும விண்மீன்கள்கள், செயல் முனைவான பால்வெளிக் கொத்துக் கருக்கள், வெப்பமற்ற மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் எச்சங்கள் உட்பட புடவியில் அறியப்பட்ட 50 பொலிவுமிகும் வான்பொருட்களை எக்சுப்போசாட்(XPoSat) விண்கலம் ஆய்வு செய்யும்.
ககன்யான் ("வட்டணை ஊர்தி") என்பது இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் அடிப்படையாகக் கருதப்படும் மாந்தக் குழுவுடனான வட்டணை விண்கலம் ( இசுரோ மற்றும் எச்ஏஎல் இணைந்து உருவாக்கப்பட்டது). விண்கலம் மூன்று பேரை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் திட்டமிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட வகைக்கலம் சந்திப்பு மற்றும் நறுக்குதல் திறன் கொண்டதாக இருக்கும். தொடக்கக் குழுப் பயணப் பணிக்கு முந்தைய இரண்டு ஊர்தி வெள்ளோட்டங்களில் இதுவே முதல் முறையாகும்.
தொடக்கக் குழுப் பயணப் பணிக்கு முந்தைய இரண்டு ஊர்தி வெள்ளோட்டங்களில் இது இரண்டாவதாகும்.
நிசார்
ஜனவரி 2024
SAR செயற்கைக்கோள்
நாசா-இசுரோ செயற்கைத் துளை வீவாணி (NISAR) திட்டப்பணி என்பது நாசாவும் இசுரோவும் இணைந்த ஒரு கூட்டுப்பணித் திட்டமாகும். இது தொலைநிலை உணர்தலுக்குப் பயன்படுத்தப்படும் இரட்டை அலைவெண் செயற்கைத் துளை வீவாணி செயற்கைக்கோளை உருவாக்கி ஏவுகிறது. இது முதலாம் இரட்டைக்கற்றை வீவாணி படிமச் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.[9]
மங்கள்யான் 2 (மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் 2) ( எம்ஓஎம் ) என்பது 2021-2022 காலக்கட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால்செவ்வாய்க்கு ஏவுவதற்கு திட்டமிடப்பட்ட இந்தியாவின் இரண்டாம் கோள்களுக்கு இடையேயான முனைவு ஆகும். இசுரோ தலைவர் கே. சிவன் ஒரு நேர்காணலில் கூறியது போல், இது ஒரு வட்டணைக்கலனைக் கொண்டிருக்கும், ஆனாலும், இதில் ஒரு தரையிறங்கியும் தரையூர்தியும் இருக்கவும் வாய்ப்பு இருந்தது; ஆனால் பின்னர் அது ஒரு வட்டணைக்கலத் திட்டம் மட்டுமே என்று முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டது [10]
முதலில் ககன்யான் பணி, குழுப்பயண விண்கலம் அனுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது வெற்றி பெற்றால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் உலகின் நான்காவது நாடாக (அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுக்குப் பிறகு) இந்தியா அமையும்.
நிலா முனை ஆய்வுப் பணி
2025
நிலாத் தரையிறங்கியும் தரையூர்தியும்
நிலா முனை ஆய்வுப் பணி என்பது 2025 ஆம் ஆண்டில் நிலவின் தென்முனைப் பகுதியை ஆராய்வதற்காக ஜாக்சா, இசுரோ இணைந்து முன்வைத்த திட்டப் பணியாகும். நிதி திட்டமிடல் பற்றிய கருத்துருவம் இன்னும் முறையாக முன்மொழியப்படவில்லை.
சந்திரயான்-5
2025-30
நிலாத் தரையிறங்கி அடிப்படையிலான சுழல்துளைப்புக் கருவி உள்ள கல அமைப்பு