பெரும்பாவூர் ஜி. இரவீந்திரநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும்பாவூர் ஜி. இரவீந்திரநாத்
பிறப்பு5 சனவரி 1944 (1944-01-05) (அகவை 80)
பெரும்பாவூர், எர்ணாகுளம், கேரளா
பணிஇசையமப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987-தற்போது வரை

பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத் (Perumbavoor G. Raveendranath) கேரளாவின் எர்ணாகுளத்தின் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த இந்திய இசைக்கலைஞராவார். இவர் ஒரு கருநாடக இசைக்கலைஞராக நன்கு அறியப்பட்டவர். இவர் இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். இவரது படைப்புகளில் எப்போதும் ஆழமாக வேரூன்றிய | கர்நாடக தொடர்பு இருக்கிறது. [1]

இசையமைப்பாளர்[தொகு]

இரவீந்திரநாத் மலையாளத்தில் "இன்னேல்", "சினேகம்", "தூவானத்தும்பிகள்" போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். [2] பத்மராஜன் இயக்கிய இன்னேல் படத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். [3] மலையாளத்தில் சிறந்த பக்தி இசைப்பாடல்களை உருவாக்க "தரங்கனி ஸ்டுடியோ" என்ற இசையரங்கத்தை நிறுவி கே.ஜே.யேசுதாசுடன் சேர்ந்து, திரிமதுரம் என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

வழக்குறைஞர் வி.ஆர். கோபாலபிள்ளை, பார்கவி அம்மா ஆகியோருக்கு இளைய மகனாக 1944 சனவரி 5 அன்று பிறந்தார். தனது ஒன்றரை வயதில் தனது தந்தையை இழந்தார். காலடி சிறீ சங்கரா கல்லூரியில் வேதியியலில் இளங்கலை முடித்துள்ளார். சோபா மேனன் என்பவரை மணந்த இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "I have my own style of rendering". தி இந்து. 2008-07-11 இம் மூலத்தில் இருந்து 2008-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080715165737/http://www.hindu.com/fr/2008/07/11/stories/2008071150560200.htm. பார்த்த நாள்: 2009-10-18. 
  2. "Malayalam Songs Composer - Perumbavoor G Ravindranath". Malayalasangeetham.info. Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
  3. "Kerala State Film Awards". The Information & Public Relations Department of Kerala. Archived from the original on 2009-11-19. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.

வெளி இணைப்புகள்[தொகு]