சீன சோவியத் எல்லை பிரச்சனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீன சோவியத் எல்லை பிரச்சனை என்பது 1969ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏழு மாதங்களுக்கு நடந்த அறிவிக்கப்படாத ராணுவ சண்டை ஆகும். இது சீன சோவியத் அரசியல் பிரிவை தொடர்ந்து நடைபெற்றது. மிகுந்த பிரச்சினைக்குரிய எல்லை சண்டையானது மார்ச் 1969ஆம் ஆண்டு மஞ்சூரியாவுக்கு அருகில் உசூரி ஆற்றின் சென்பாவா (தமன்ஸ்கி) தீவில் நடைபெற்றது. சண்டையின் காரணமாக உலகின் இரண்டு பெரிய பொதுவுடமைவாத நாடுகள் போரில் ஈடுபடும் நிலைக்கு வந்தன. எனினும் சண்டையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முந்தைய எல்லை நிலைக்கு இரண்டு நாடுகளும் திரும்பின.

தூதரக நடவடிக்கைகள்[தொகு]

17 மார்ச் 1969ஆம் ஆண்டு வார்சா உடன்பாட்டு நாடுகளின் அவசர சந்திப்பு நடைபெற்றது. சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்க சோவியத் தீர்மானம் கொண்டு வந்தது. எனினும் ருமேனியா, இந்தியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரிய பொதுவுடைமைக் கட்சிகள் சீனாவுக்கு ஆதரவு தெரிவித்தன. சோவியத் ஒன்றியம் தான் சீனாவைத் தாக்கியது, சீனா சோவியத் ஒன்றியத்தைத் தாக்கவில்லை என்ற சீன நிலைப்பாட்டை ஆதரித்தன.[1]

1 ஆகஸ்டு 1969 அன்று அமெரிக்க அதிபர் நிக்சன் பாகிஸ்தானுக்கு சென்றார். பாகிஸ்தான் சீனாவின் நெருங்கிய கூட்டாளி நாடு ஆகும். இரு நாடுகளுமே இந்தியாவுக்கு எதிரானவை ஆகும். அவர் தளபதி யாக்யா கானிடம் மாவோவுக்கு தன் செய்தியை தெரிவிக்குமாறு கூறினார். அது, குறிப்பாக சோவியத் ஒன்றியத்துடனான பிரச்சினை காரணமாக சீனாவுடன் அமெரிக்கா உறைவை புதுப்பிக்க விரும்புவதாகும்.

ஹோ சி மின் இறுதிச் சடங்கு[தொகு]

ஹோ சி மினின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சோவியத் தலைவர் கோசைகின் மாஸ்கோவுக்குத் திரும்ப சீனா வான்வெளியில் பறக்க சீனா அனுமதி மறுத்தது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்ப கொல்கத்தாவில் இறங்க சோவியத் விமானம் கட்டாயப்படுத்தப்பட்டது.[2] இந்தியாவில், சீனர்கள் சோவியத்துடன் அமைதி பற்றி பேச விரும்புவதாக இந்திய அரசு சோவியத் தலைவரிடம் பேசியது. இதன் காரணமாக கோசைகின் பெய்ஜிங்குக்கு பறந்தார்.[2]

உசாத்துணை[தொகு]

  1. Lüthi 2012, ப. 384.
  2. 2.0 2.1 Lüthi 2012, ப. 391.