ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 55: | வரிசை 55: | ||
* கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள் |
* கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள் |
||
* உடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள் |
* உடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள் |
||
* களிமண் கலவை தொட்டியில் உடலை மூழ்கி வைப்பவள் |
|||
== வழி மரபு == |
== வழி மரபு == |
18:26, 28 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
ஏழாம் கிளியோபாட்ரா | |
---|---|
எகிப்தின் அரசி | |
படிமம்:கிளியோபாட்ரா.jpg | |
ஆட்சி | கிமு 51 –12 ஆகஸ்ட் கிமு 30 தொலமி XIII (51 BC–47 BC) தொலமி XIV (கிமு 47 – கிமு 44 ) சீசரியன் (கிமு 44 –கிமு 30 ) |
முன்னிருந்தவர் | தொலமி XII |
பின்வந்தவர் | இல்லை (ரோம மாகாணம்) |
அரச குலம் | தொலமிய |
தந்தை | தொலமி XII |
தாய் | எகிப்தின் கிளியோபாட்ரா V |
கிளியோபாட்ரா VII (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; கிமு 69 [1] – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் நபராவார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். பண்டைய எகிப்தின் ஹெலனிய அரசியான இவர் ஏழாம் கிளியோபாட்ரா என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கு முன் டோல்மயிக் அரச பரம்பரையில் ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.
கிளியோபட்ரா தன்னுடைய தந்தையான 12ம் தொலமியுடன் ஆட்சி செய்தவர், அவருடைய இறப்பிற்கு பின்பு சகோதரர்கள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. அடுத்தாக, ஜூலியஸ் சீசரை திருமணம் செய்துகொண்டவருக்கு தாலமி சீஸர் என்ற குழந்தையுண்டு. சீசரின் மரணத்திற்குப்பிறகு அவருடைய படைத்தளபதியான மார்க் ஆண்டனியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். எனவே கிளியோபட்ராவிற்கு நான்கு கணவன்மார்கள், நான்கு குழந்தைகள். அறிவு, செயல்திறன், அழகு கொண்டவராக கிளியோபட்ரா அறியப்பெறுகிறார். இவர் வெண்மைநிறம் வாய்ந்தவர் என்றும், பேரழகி என்ற கருத்தும் வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியரான ப்ளூடார்க் கிளியோபட்ராவினை பேரழகி இல்லை என்கிறார். [1]
வாழ்க்கை வரலாறு
பன்னிரண்டாம் தொலமி க்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய ஆண்மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாயாக இஸிஸ் என்பர் அறியப்பெறுகிறார். பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் அரசாள இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரன்களுடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், தொலமிக்கு பத்து வயதுமென அறியமுடிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.
சீசருடனான வாழ்க்கை
அமைச்சர்களும், வணிகர்களும் தொலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்து கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பரிபோனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்கு சென்றவள், ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசர் தொலமியை கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்துகொள்கிறார். இத்தம்பதிகளுக்கு பிறந்தவராக சிசேரியன் அறியப்பெறுகிறார். தொலமியை கொன்றது கிளியோப்பட்ராவே என்றும் கருத்துண்டு.
ஆண்டனியுனான வாழ்க்கை
நெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்கு சென்ற சீசர். ரோம் பாராளுமன்றத்தில் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரை கொலை செய்தான். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழந்தது. கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதனையும் கிளியோபட்ராவே கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனது. ஆண்டனி கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார்.
சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பெற்றார்.
மரணம்
ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப்பாம்புகளை தீண்டும் படி செய்து உயிர் துறந்தாள். கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாக கூறுவதுண்டு. கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.
கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கதிலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர். பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன. [2]
திறமை
கிளியோபாட்ராவை பேரரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், சோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களை தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வை தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காண்பபடுகிறது.
கிளியோபட்ராவின் நம்பிக்கைகள்
- தினம் கழுதை பாலில் குளிப்பவள்
- கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்
- உடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்
- களிமண் கலவை தொட்டியில் உடலை மூழ்கி வைப்பவள்
வழி மரபு
எகிப்பத்தின் அரசியான கிளியோபட்ராவின் டோல்மயிக் வம்சம் மிகவும் புகழ்பெற்றதாகும். இவருடைய அன்னை இஸிஸூக்கு பன்னிரண்டாம் தொலமி மாமன் முறையாகிறது என்பதும், கிளியோபட்ராவின் முன்னால் இருந்தவர்களைப் பற்றியும் வம்ச வரைபடம் தெளிவாக விளக்குகிறது.
நூல்கள்
வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களால் கிளியோபாட்ரா - மார்க் ஆண்டனியின் காதல் கதை நாடக வடிவில் இயற்றப்பெற்று பெரும்புகழ் பெற்றது.
தமிழ் நூல்கள்
- கிளியோபாட்ரா - நெல்லை விவேகநந்தா
- கிளியோபாட்ரா - ச.சரவணன்
- கிளியோபாட்ரா - முகில்
கோப்புகள்
-
கிளியோபட்ராவின் மரணம் ஓவியம்: ரேகினல்த் ஆர்தர் , 1892
-
கிளியோபட்ராவின் மரணம் ஓவியம்: ஜோன் லூனா , 1881
-
கிளியோபட்ரா எகிப்தின் கடவுளாக கருதப்பெறும் கி.மு ஒன்றாம், இரண்டாம் நூற்றாண்டினைச் சார்ந்த சிலை
காண்க
ஆதாரம்
- ↑ மருதன் , ஆனந்தவிகடன் .03 - 06 - 2009 .
- ↑ http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12