சந்தோஷ் நாராயணன் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தோஷ் நாராயணன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் கலைடாஸ்கோப், அஞ்ஞான சிறுகதைகள் என இரு நூல்களை எழுதியுள்ளார். இவர் புத்தக அட்டை வடிவமைப்பு, மினிமலிச ஓவியங்கள் போன்றவைகளுக்காக அறியப்படுகிறார்.[1]

இவர் சென்னை அரசு கவின் கலை ஓவியக்கல்லூரியில் படித்தார். சந்தோஷ் நாராயணனின் முதல் அட்டைப்படம் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சுந்தர ராமசாமியின் புதியபதிப்பாகும்.[2]

சச்சின் ஓவியம்[தொகு]

இவர் மட்டைப்பந்து வீரர் சச்சினின் 100 செஞ்சுரிகளைக் கொண்டு ஓவியம் வரைந்தார்.[3] அதில் ஒவ்வொரு செஞ்சுரிகளைப் பற்றிய தகவல்கள் இருந்தன. இந்த ஓவியம் ஸ்போர்ட் ஸ்டார் பத்திரிகையின் ஆசிரியரால் சச்சினுக்கு பரிசாக வழங்கப்பட்டது.[4]

விருதுகள்[தொகு]

2018 க்கான ஆனந்தவிகடன் டாப்10 இளைஞர் விருது [5]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. இந்த வலையில் ஒரு கண்ணி தான் சந்தோஷ் நாராயணன்
  2. [விஷயத்தை விஷுவல் மூலம் எளிமையாகச் சொல்வதே மினிமலிசம்!’ - சந்தோஷ் நாராயணன் -சக்தி தமிழ்ச்செல்வன். விகடன் 05/01/2018 ]
  3. சச்சின் ரசித்த சந்தோஷ் ஓவியம் இந்து தமிழ் நாளிதழ்
  4. சச்சினை வியக்க வைத்த தமிழரின் ஓவியம்!- சக்தி தமிழ்ச்செல்வன் 16 நவம்பர் 2018
  5. ஆனந்த விகடன் இதழ் - இது தமிழ் ஓவியவெளிக்கான அங்கிகாரம் -பிப்ரவரி 2019 பக்கம் 48

வெளி இணைப்புகள்[தொகு]