ஈ. த. இராசேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ. த. இராசேசுவரி
பிறப்பு1906
இறப்பு1955
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஅறிவியல் தமிழறிஞர்

ஈ. த. இராசேசுவரி (1906 - 1955) அறிவியல் தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ் இலக்கிய நூல்களில் அறிவியல் குறிப்புகளை எடுத்துக் காட்டி எழுதினார். இவர் சென்னை இராணி மேரிக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.⁠[1]

தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. தமிழ்க் கலைக்களஞ்சியம் 1 பொருட்பட்டி அமைப்புக் குழுவினர் பட்டியலில், பெளதிகம். ரசாயணம் என்ற துணைப்பிரிவில் பக்கம் எண் xiii
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._த._இராசேசுவரி&oldid=3841941" இலிருந்து மீள்விக்கப்பட்டது