ஆ. பூவராகம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899[1] - மே 28, 1973) தமிழறிஞராவார். தொல்காப்பியத்தைப் 1954 ஆம் ஆண்டு பதிப்பித்தார்[2].

ஆற்றிய பணிகள்[தொகு]

சிதம்பரத்தில் உள்ள இராமசாமிசெட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கண உரையாசிரியர்[தொகு]

தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார்[3]. இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

வைணவம் தொடர்பாக இவர் படைத்த நூல்கள்- திருவாய்மொழி விளக்கம்[4], திருமங்கையாழ்வார் பெரிய திருமொழிஆகியன. மேலும்,' புலவர் பெருமை' எனும் நூலையும் இயற்றியுள்ளார்.

தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி 1 நூலின் கட்டுரையாளர்களில் ஒருவராக இருந்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.[5]

சிறப்புகளும் விருதுகளும்[தொகு]

தனிநாயக அடிகளார், பிள்ளையவர்களின் இலக்கணப் புலமையை அறிந்து, அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்து வீரமாமுனிவரின் ‘தொன்னூல் விளக்கம்’ எனும் இலக்கண நூலைப் பாடம் கேட்டதாகவும் சொல்லுவர்[சான்று தேவை]. 16-8-1930 இல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசளித்து சிறப்பித்துள்ளது.[6]

மறைவு[தொகு]

மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. நூல்:தமிழ்ச் சொல்லாக்கம், ஆசிரியர்: உவமைக் கவிஞர் சுரதா, பக்கம்: 190 [1]
  2. தொல்காப்பியப் பதிப்பாசிரியர்கள் பரணிடப்பட்டது 2016-03-17 at the வந்தவழி இயந்திரம், முனைவர் இரா. வெங்கடேசன், நாள்: மே 15, 2015.
  3. [2]
  4. திருவாய்மொழி விளக்கம்: திருசிராப்பள்ளி வானொலியிற் பேசப்பெற்றவை, கூகுள் புக்சு
  5. விக்கிமூலம், கலைக்களஞ்சியம் 1, முதல் தொகுதி கட்டுரையாளர்கள்
  6. சீர்காழி வி.இராம்தாஸ்,' ஸ்ரீகாசிமடம் அருள் வரலாறு'
  • முனைவர் க.முருகேசன்,' இலக்கணச் சிங்கம் ஆ.பூவராகம்பிள்ளை, தினமணி- தமிழ்மணி 25-5-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._பூவராகம்_பிள்ளை&oldid=3488808" இலிருந்து மீள்விக்கப்பட்டது