விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 24, 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள் மரணத்திற்கு பிறகும் உடல் மற்றும் உயிரின் அழியாமையை உறுதிப்படுத்த மந்திரங்களுடன் சடங்குகள் செய்வதுடன், இறந்தவர்களில் உடலைப் பதப்படுத்தி, சவப்பெட்டியில் வைத்து, மம்மியின் மூடி மீது மந்திர எழுத்துக்களை பொறிப்பதுடன், இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்கள், இறந்தவர்களுக்கான உணவு வகைகளுடன் கல்லறைக் கோயியிலில் வைத்தனர். மேலும்...


நார்மெர் கற்பலகை பண்டைய எகிப்தின் துவக்க அரசு மரபு காலத்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் நிறுவிய கல்வெட்டு பலகை ஆகும். அழகிய இக்கற்பலகையின் காலம் ஏறத்தாழ கிமு 3200 – 3000 ஆகும். 64 செமீ நீளம், 42 செமீ அகலம் கொண்ட இந்த அழகிய வண்டல் கல் தட்டு, எகிப்தின் தொல்லியல் வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகையான கல்வெட்டு தொல்பொருள் என எகிப்தியவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும்...