வட்டமலைக்கரை ஓடை அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டமலைக்கரை அணை
நீர்வரத்திற்கு பின் அணையின் காட்சி-2021
அமைவிடம்திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
திறந்தது1978
அணையும் வழிகாலும்
நீளம்700 ஏக்கர்

வட்டமலைக்கரை அணை (Vattamalai Karai Odai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் அருகே உத்தமபாளையத்தில் உள்ள ஒரு அணையாகும். இந்த அணை 1978-இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 268 மில்லியன் கன அடிகள்.[1] இந்நீர்த் தேக்கத்தில் இருந்து 6,060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இந்த அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் பல பத்தாண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் இந்த அணைக்கு அமராவதி ஆற்றில் இருந்து நீரைக் கொண்டுவர ஒரு திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.[2]

நீர்வரத்து[தொகு]

17 ஆண்டுகளாக வறண்டு கிடந்து வட்டமலைக்கரை ஓடை அணைக்கு 2021 இல் அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
  2. "வறண்டு கிடக்கும் வட்டமலைக்கரை அணை: அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்துக்குப் பரிந்துரை". செய்தி. தினமணி. 28 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2018.
  3. "அமராவதி ஆற்றில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு - வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறப்பு :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டமலைக்கரை_ஓடை_அணை&oldid=3761259" இலிருந்து மீள்விக்கப்பட்டது