ராஜகோவிந்தராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜகோவிந்தராயன் கங்க வம்சத்தின் 13வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை சாலிவாகன சகம் 461 சித்தார்த்தி வருடம் என அறுதியிட்டுக் கூறுகிறது. இவர் கொங்கணி மகாதிராயனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]

முகுந்த பட்டணம்[தொகு]

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் முகுந்த பட்டணம்த்தைத் தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், இவன் வில் வித்தையில் நல்ல தேர்ச்சி பெற்றவனாகையால் பல தேச மன்னர்களை வென்றும் அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும் அறியமுடிகிறது.[2]

சைவமதம்[தொகு]

ராஜகோவிந்தராயன் மிகச் சிறந்த வில்போர் வீரனாக விளங்கினான். இவன் வீர சைவத்தில் மிகுந்த நாட்டமுடைவனாக இருந்ததால் இவன் காலத்தில் வீர சைவமதம் பிரமலமடைந்தது. இதன் காரணமாய் இவனை நந்திவர்மன் என மக்கள் பெயரிட்டு அழைத்தனர்.[3]

சான்றாவணம்[தொகு]

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-105)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  3. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-105)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-

ஆதாரங்கள்[தொகு]

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜகோவிந்தராயன்&oldid=3600186" இலிருந்து மீள்விக்கப்பட்டது