யோசேபா அலோமாங்கு
யோசேபா அலோமாங்குYosepha Alomang | |
---|---|
தேசியம் | இந்தோனேசியர் |
அறியப்படுவது | சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2001) |
யோசேபா அலோமாங்கு (Yosepha Alomang) இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார். மாமா யோசெஃபா அலோமாங்கு என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். பப்புவா மாகாணம் பூமியில் உயிரியல் ரீதியாக வேறுபட்ட பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாகும்.[1] இங்கு மழைக்காடுகளும் மிகப்பெரிய தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கங்களும் உள்ளன.
முப்பது ஆண்டு காலமாக மழைக்காடுகளை அழித்தல், ஆறுகளை மாசுபடுத்துதல், உள்ளூர் மக்கள் சமூகத்தை இடம்பெயரச் செய்தல் போன்றவற்றுக்கு காரணமாக இருந்த மிகப்பெரிய சுரங்க நிறுவனமான பிரீபோர்டு-மக்மொரனின் சுரங்க நடைமுறைகளை எதிர்க்க தனது சமூகத்தை ஒழுங்கமைத்த முயற்சிகளுக்காக 2001 ஆம் ஆண்டு இப்பெண்மணிக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Goldman Environmental Prize: Yosepha Alomang பரணிடப்பட்டது அக்டோபர் 23, 2007 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on November 10, 2007)