யூபம் (தூண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூபம் என்பது கொடிக்கம்பம்.
இக்காலத்தில் கோயில்களில் நடப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் போல நடப்படுவது.
வேள்வி செய்யும் இடங்களிலும், வெற்றி பெற்ற களங்களிலும் இது நடப்படும்.

நெட்டிமையார் என்னும் புலவர் முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனைப் பாடும்போது நீ நாட்டிய வெற்றித்தூண் அதிகமா, வேள்வித்தூண் அதிகமா எனக் கூறி வியக்கும்போது அந்தத் தூண்களை யூபம் எனக் குறிப்பிடுகிறார். [1]

கருங்குழலாதனார் என்னும் புலவர் சோழன் கரிகாற் பெருவளத்தான் போர்களத்திலேயே வேதவேள்வி யூபநெடுந்தூண் நாட்டியது பற்றிக் குறிப்பிடுகிறார். [2]

ஏழாம் பதிற்றுப்பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் சேரமன்னன் வெற்றிக்களத்தில் யூபம் நட்டது பற்றிய குறிப்பு உள்ளது. [3]

இவற்றையும் பார்க்க[தொகு]

சங்ககால விளையாட்டுகள்
பிணையூபம்

அடிக்குறிப்பு[தொகு]

  1. வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பலகொல் யாபல கொல்லோ - புறநானூறு 15
  2. எருவை நுகர்ச்சி யூபநெடுந்தூண் வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம் அறிந்தோன் - புறநானூறு 224
  3. எருவை குருதி ஆர தலை துமித்து எஞ்சிய ஆண்மலி யூபமொடு உருவு இல் பேய்மகள் கவலை கவற்ற - பதிற்றுப்பத்து 67
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபம்_(தூண்)&oldid=3178244" இலிருந்து மீள்விக்கப்பட்டது