மும்தாஜ் ஷேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மும்தாஜ் ஷேக் (Mumtaz Shaikh பிறப்பு 18 நவம்பர் 1981) ஓர் இந்தியப் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார், இவர் மும்பையில் பொது கழிப்பறைகளுக்கு சமமான அணுகலுக்கான வெற்றிகரமான பிரச்சாரத்தைத் தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில் பிபிசியால் அதன் 100 ஊக்கப்படுத்தும் பெண்கள் பிரச்சாரங்களில் ஒன்றாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மும்தாஜ் ஷேக் 1981 இல் மகாராஷ்டிராவின் அகமதுநகரில் பிறந்தார். இவரது தந்தை, அபு பக்கர், ஒரு ஓட்டுநர் மற்றும் பூர்விகமாக மலையாளம் பேசுபவராக இருந்தார் மற்றும் இவரது தாயார், மதீனா இந்தி மொழி பேசினார். இவர் பிறந்ததும், இவரது குடும்பம், மூத்த சகோதரர் ரபீக் உட்பட, மும்பை புறநகர், செம்பூரின் வாஷி நகா பகுதிக்கு குடிபெயர்ந்தார். [1] குடும்ப வன்முறை காரணமாக இவர், இவரது மாமா ஷேக் வீட்டிற்கு அனுப்பப்பப்படார், இவள் தங்குமிடத்திற்கு ஈடாக அந்த வீட்டின் வேலைகளைச் செய்து வந்தார், ஆனால் பலமுறை பசியுடன் இருந்தார். [2] இவருக்கு ஐந்து வயதும், இவளுடைய சகோதரனுக்கு எட்டு வயதும் இருந்தபோது, இவர்களின் தந்தை ரபீக்கை கேரளாவில் உள்ள பெற்றோரிடம் அழைத்துச் சென்றார். [1] குழந்தை பருவத்தின் கடுமையான வறுமையின் காரணமாக, ஷேக் 9 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறினார், இவளுடைய மாமா இவளுக்கு பதினைந்து வயதில் திருமணத்தை ஏற்பாடு செய்தார். [2] [3] திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டது .பதினாறாவது வயதில் இவருக்கு மகள் பிறந்த பிறகு, ஷேக் தனது சமூகத்தில் குடும்ப வன்முறை குறித்த விரிவுரைகளில் இரகசியமாக கலந்து கொள்ளத் தொடங்கினார். இவரது கணவரின் ஆட்சேபனைகளை மீறி, இவர் அந்த அமைப்பின் தன்னார்வலராக ஆனார், விரைவில் திருமண முறிவு பெற பதிவு செய்தார். [2]

தொழில்[தொகு]

2000 ஆம் ஆண்டில் கோரோவின் முக்கிய குழு உறுப்பினரானார் மற்றும் 2005 இல் லீடர்ஸ் குவெஸ்ட் ஆய்வுதவித் தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மும்தாஜ் தனது சமூகத்தில் மற்ற பெண்களுக்கு வழிகாட்டத் தொடங்கினார். [2] [4] அடுத்த பத்து ஆண்டுகளில் இவர் கோரோவின் இணைச் செயலாளரானார் மற்றும் 2006 இல் மறுமணம் செய்து கொண்டார். கோரா மகிளா மண்டல் கூட்டமைப்பை உருவாக்கியபோது, மும்தாஜ் அதன் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டார். [5] [4] கோராவின் சுகாதாரத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மும்தாஜ் 2011 இல் பொதுக் கழிப்பறைகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கினார் மற்றும் 2012 இல் குளியலறை வசதிகளில் பாதுகாப்பு மற்றும் நிலைமைகளை மதிப்பீடு செய்ய ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். [4] 2013 இல், இவர் மும்பையில் கழிப்பறை வசதிகளுக்கு சமமற்ற அணுகல் பிரச்சினையை இலக்காகக் கொண்டு ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். மும்தாஜ் ரைட் டு பீ பீ பிரச்சாரத்தின் செய்தித் தொடர்பாளரானார், 2012 ல் மும்பையில், 5,993 பொதுக் கழிப்பறைகள் மற்றும் 2,466 சிறுநீர் கழிப்பிடங்களை ஆண்களுக்கு அரசாங்கம் வழங்கியது, ஆனால் பெண்களுக்கு 3,536 வசதிகள் மட்டுமே வழங்கப்பட்டது. [6] ரயில் நிலையங்கள் மோசமான நிலைமைகளைக் கொண்டிருந்தன, மத்திய மற்றும் துறைமுக ரயில் பாதைகளில் அமைந்துள்ள 69 நிலையங்களுக்கு 100 க்கும் குறைவான சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் கழிவறைகள் இருந்தன. [5] ஆண்கள் சிறுநீர் கழிப்பிடத்தைப் பயன்படுத்த கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை, ஆனால் பெண்கள் கழிப்பறையைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டியிருந்தது. இவர்கள் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையை குறைக்க, பெண்கள் அடிக்கடி போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தனர், இதனால் உடல்நல சிக்கல்கள் ஏற்படும் சிக்கல் எழுந்தது. [6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Sangameshwaran 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 Sirohi 2015.
  3. The Hindu 2015.
  4. 4.0 4.1 4.2 The Hindu 2015.
  5. 5.0 5.1 Pinto 2014.
  6. 6.0 6.1 Yardley 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்தாஜ்_ஷேக்&oldid=3285884" இலிருந்து மீள்விக்கப்பட்டது