மகாநதி இரண்டாம் இரயில் பாலம்
மகாநதி இரண்டாம் இரயில் பாலம் Second Mahanadi Rail Bridge | |
---|---|
ஆள்கூற்று | 20°29′07″N 85°54′38″E / 20.4852°N 85.9105°E |
வாகன வகை/வழிகள் | காரக்புர்-பூரி வழித்தடம், அவுரா-சென்னை முதன்மை வழித்தடம் |
கடப்பது | மகாநதி |
இடம் | கட்டக் |
Characteristics | |
மொத்த நீளம் | 2,100 மீட்டர்கள் (6,900 அடி) |
History | |
திறக்கப்பட்ட நாள் | 2008 |
மகாநதி இரண்டாம் இரயில் பாலம் (Second Mahanadi Rail Bridge) இந்திய மாநிலமான ஒடிசாவில் கட்டாக் நகருக்கு அருகே மகாநதியின் மீது கட்டப்பட்டுள்ள இரயில் பாலமாகும்.
மகாநதி முதல் இரயில் பாலம் 1899 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 அன்று திறக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 100 அடி (30.48 மீட்டர்) நீளம் கொண்ட 64 இடைவெளிகளைக் கொண்டிருந்தது. 19 அடி 6 அங்குலம் (5.94 மீட்டர்) விட்டம் கொண்ட கிணறுகளில் குறைந்த அளவு நீர் மட்டத்திற்கும் கீழே 60 அடி (18.28 மீட்டர்) ஆழம் வரை மூழ்கியிருந்தது.[1] மகாநதி முதல் இரயில் பாலத்தின் கட்டுமானப் பொறியாளராக வில்லியம் பெக்கெட் பணியாற்றினார். 1901 ஆம் ஆண்டு பாலம் கட்டுமானம் குறித்து இவர் சமர்ப்பித்த கட்டுரைக்காக கட்டடப் பொறியாளர் நிறுவனம் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கியது.[1]
2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) நீளமுள்ள மகாநதி இரண்டாவது இரயில் பாலம் ₹120 கோடி (US$16 மில்லியன்) செலவில் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 160 கிமீ (மணிக்கு 99.41 மைல்) வேகம் செல்லும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தாங்கவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "East Coast Railway". Archived from the original on 2012-03-26. பார்க்கப்பட்ட நாள் 2011-07-06.
- ↑ "Second rail bridge over Mahanadi commissioned". தி இந்து (Chennai, India). 27 July 2008 இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081010023746/http://www.hindu.com/2008/07/27/stories/2008072756890300.htm.
புற இணைப்புகள்[தொகு]
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Video of a train passing over the Mahanadi Bridge |