பேச்சு:கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்
குடமுழுக்கு[தொகு]
இன்று (29.1.2016) காலை குடமுழுக்கிற்கு காண நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரமும், புகைப்படங்களும் சேர்க்கப்பட்டன. மேற்கொண்டு விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:52, 29 சனவரி 2016 (UTC)
கோயில் அமைப்பு[தொகு]
இத்தலைப்பில் எழுதப்பட்டுள்ள விவரங்கள் இன்று (29.1.2016) குடமுழுக்கிற்காக நேரில் சென்றபோது காணப்பட்டவையாகும். இடிபாடுற்ற நிலையில் இருந்த இக்கோயில் திருப்பணியின்போது திருச்சுற்றில் விநாயகர், முருகன், நவக்கிரகங்களுக்கு சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில சன்னதிகள் புதிதாகக் கட்டப்பட்டவை என்று கூறினர். திருச்சுற்று, சுவர் போன்றவை புதிதாக அமைக்கப்பட்டு கோயில் புதிய பொலிவில் இருப்பதைக் காணமுடிந்தது. பழமை மாறாமல் இருப்பதற்காக பழைய இடிபாடுற்ற கோபுரத்தை அப்படியே வைத்துள்ளனர். இக்கோபுரத்தில் மிக அழகான யாழி சிற்பங்கள் காணப்படுகின்றன. அச்சு வடிவில் விவரங்கள் கிடைக்கும்போது உரிய இடத்தில் இணைக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:11, 29 சனவரி 2016 (UTC)