புரு (வேத காலப் பழங்குடியினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரு (Puru) என்பவர்கள் ஓர் இருக்கு வேத காலப் பழங்குடியினம் அல்லது பழங்குடியினங்களின் கூட்டமைப்பு ஆவர். இவர்கள் அண். பொ. ஊ. மு. 1700 முதல் பொ. ஊ. மு. 1400 வரையிலான காலத்தில் அமைந்திருந்தனர். புரு பழங்குடியினத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தன. அவற்றில் ஒரு பிரிவினர் பாரதர்கள் ஆவர். பெரும்பாலான இருக்கு வேதத்தில் இரு முக்கியமான பழங்குடியினங்களாகப் புருக்களும், பாரதர்களும் திகழ்கின்றனர்.[1] பாரதர்களின் மன்னர் சுதாசுவுக்கு எதிராகப் பல பிற குழுக்களைப் புருக்கள் கூட்டணி வைத்து எதிர்த்தனர். ஆனால், பத்து மன்னர்களின் போரில் தோற்கடிக்கப்பட்டனர்.

குறிப்புகள்[தொகு]

  1. Erdosy, George; Witzel, Michael (1995). Language, Material Culture and Ethnicity. The Indo-Aryans of Ancient South Asia: Rgvedic history: poets, chieftains and politics. De Gruyter. பக். 237–242. 

மேற்கோள்கள்[தொகு]