பி. வி. ரங்கையா நாயுடு
பி. வி. ரங்கையா நாயுடு | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | கம்மம் பாராளுமன்றத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 6 ஏப்ரல் 1933 அமலாபுரம், ஆந்திரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | காலஞ்சென்ற திருமதி. மகாலெட்சுமி ரங்கையா நாயுடு |
பிள்ளைகள் | 1 மகன், 3 மகள்கள் |
இருப்பிடம் | ஐதராபாத்து |
As of 26 Sep, 2008 Source: [1] |
பாலச்சொல்ல வெங்கட ரங்கையா நாயுடு (பி.வி.ரங்கய்ய நாயுடு என்றும் உச்சரிக்கப்படுகிறது) (பிறப்பு: ஏப்ரல் 6, 1933) இந்தியாவின் 10 வது மக்களவையில் உறுப்பினராக இருந்த அரசியல்வாதி ஆவார்.. அவர் ஆந்திராவின் கம்மம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.. அரசியலில் சேருவதற்கு முன்பு இந்திய காவல் சேவையில் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக தனது நாட்டிற்கு சேவை செய்தார். அவர் இந்திய நாட்டுக்கு சிறப்பான சேவைக்காக இரண்டு முறை கௌரவிக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டில் நாயுடுவுக்கு இந்திய காவல் துறை பதக்கம் வழங்கப்பட்டது, 1983 ஆம் ஆண்டில் அவருக்கு சிறப்பு சேவைக்கான ஜனாதிபதியின் காவல்துறை பதக்கம் வழங்கப்பட்டது. 1991 முதல் 1996 வரை பி.வி. நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். அவர் தொலைத்தொடர்பு துணை அமைச்சராகவும், மின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் இந்திய காவல் துறை சேவையில் இருந்து ஓய்வு பெற்றதிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.