உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளைமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து சமயம், கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வெள்ளாளர்

பிள்ளை என்பது தமிழ்நாடு மற்றும் வட இலங்கையின் முன்னணி வேளாண்மை மற்றும் நில உரிமையாளர் சமூகமான வெள்ளாளர் சமூகத்தின் பல்வேறு உயர்நிலை துணைச் சாதிகளில்[a][2] பரவலாகக் காணப்படும் தமிழ்ப் பட்டப்பெயராகும்.[3][4] "பிள்ளை" என்பது "அரச குழந்தை" அல்லது "மன்னனின் மகன்" (இளவரசன்) எனப் பொருள்படும் கௌரவப் பட்டமாகத் தோற்றம் பெற்றது; இது உயர் குலம் மற்றும் மரியாதை ஆகியவற்றைக் குறிக்கிறது.[5][6] காலப்போக்கில், இது நில மேலாண்மை மற்றும் கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்த உயர்குடி தமிழர்களுடன் தொடர்புடைய பரம்பரைப் பட்டப்பெயராக மாறியது.

தமிழ்நாட்டின் "பிள்ளை" பட்டப்பெயர், கேரளப் பட்டமான பிள்ளையை விட வேறுபட்டதாகும்; இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை.[7]

சொற்பிறப்பு மற்றும் தோற்றம்

[தொகு]

கல்வெட்டுப் பதிவுகளின்படி, பிள்ளை எனும் பட்டம் சங்க காலத்திற்கு (கிமு 300 - கிபி 300) முந்தையதாகும். இது அரச குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பின்னொட்டுப் பட்டமாகும். முதலில் "அரச குழந்தை" அல்லது "மன்னனின் மகன்" (இளவரசன்) எனும் பொருளில் உயர்குடிப் பட்டமாகத் தோன்றியது.[5] இப்பட்டம் ஒரு தனிப் பெயராகவோ அல்லது பின்னொட்டாகவோ பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோயில் நிர்வாகிகளுக்கு வழங்கப்படலாயிற்று; இவர்கள் பெரும்பாலும் கோயில்களின் சார்பில் பெருநிலங்களைக் கையாளுபவர்களாக இருந்தனர்.[8]

தொடர்ந்து, இச்சொல் தமிழ்ச் சொல்லான பிள்ளை (குழந்தை/மகன்) என்பதில் இருந்து உருவானது. இச்சொல் பார்வதி தேவியின் மகன் எனும் பொருளையும் தரும்.[9]

"பிள்ளை" என்பதன் பன்மை வடிவம் "பிள்ளைமார்" ஆகும். இது மரியாதைப் பின்னொட்டுடன் "பிள்ளையார்" என மாற்றமடைகிறது. இந்த மொழியியல் மாற்றம் சொற்பொருள் குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது. ஏனெனில் "பிள்ளையார்" என்பது தமிழ் மரபில் விநாயகரை (கணேசர்) குறிக்கும் பொதுச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இவ்விரு பயன்பாடுகளும் சூழல்வாதத்தில் தனித்துவமானவை: ஒன்று "பிள்ளை" என்பதன் பன்மை/மரியாதை வடிவத்தையும், மற்றொன்று இறைவனையும் குறிக்கின்றன.[10] இத்தகைய பண்பாட்டுச் சூழலில், நிலச் சொத்துரிமை, கல்வி, ஆட்சிப் பணிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையோரின் அடையாளமாக இப்பெயர் உருமாறியது.

வரலாறு

[தொகு]

தமிழ்நாட்டில், "பிள்ளை" எனும் பட்டப்பெயர் முக்கியமாக வெள்ளாளர் சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்டது. சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அரசுகளின் கீழ் நில உரிமையாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் இவர்கள் இருந்தனர். குறிப்பாக நிர்வாக மற்றும் இராணுவப் பணிகளில் அரசுக்கு வழங்கிய விசுவாசம் மற்றும் சேவைகளுக்காக தனிநபர்களுக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது.[11]

கோயில் நிர்வாகத்தில் வெள்ளாளர் பிள்ளைகள் முக்கியப் பங்கு வகித்தனர்; நன்கொடைகள், சடங்குகள் மற்றும் நில மேலாண்மை ஆகியவற்றைக் கண்காணித்தனர். இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் பிள்ளைப் பட்டத்தின் முக்கியத்துவம் உச்சத்தை எட்டியது; உள்ளூர் ஆட்சியில் செல்வாக்குமிக்க பதவிகளிலும் கோயில் அறங்காவலர்களாகவும் பல பிள்ளைகள் பதிவுசெய்யப்பட்டனர்.[12]

சமூகப் பண்பாட்டு முக்கியத்துவம்

[தொகு]

"பிள்ளை" எனும் பட்டப்பெயர் தமிழ்ப் பண்பாடு மற்றும் சமூகப் படிநிலையுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இது கௌரவம் மற்றும் மரியாதைக்குரியது எனும் கருத்துகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. வெள்ளாளர்களிடையே இப்பட்டத்தின் பரவலான பயன்பாடு, வேளாண்மை மற்றும் நிர்வாகத் துறைகளில் அவர்களின் வரலாற்று ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

முதன்மையாக வெள்ளாளர் சாதியுடன் தொடர்புடையதாயினும், சமூக உயர்வுக்கான வழியாக சில சாதியினரால் இப்பட்டப்பெயர் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கோனார், அகமுடையார்[13] மற்றும் வேறு சில சாதியினர் அடங்குவர். இப்பட்டப்பெயர்கள் உயர்ந்த சமூகத் தகுதி மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் குறியீடுகளாகத் திகழ்கின்றன.[b]

குறிப்பு

[தொகு]
  1. "வெள்ளாளர்" என்பது தமிழ்நாட்டில் உயர் நிலையில் உள்ள பல பிராமணரல்லாத சாதிகளின் பொதுப்பெயராகும்.[1]
  2. தமிழ் வேளாண் சமூகத்தில் வெள்ளாளராக இருப்பது என்பது உயர்ந்த சமூகத் தகுதிக்கான பழமையான உரிமையைக் குறித்தது. எனவே, சாதியானது பொருளாதார உரிமைகளை நியாயப்படுத்தியது. வளங்களுக்கான உரிமைகளை மட்டும் கொண்டிருந்தால் போதாது; வெள்ளாளர் தகுதி அல்லது குறைந்தபட்சம் வெள்ளாளர் கௌரவப் பட்டம் மூலம் இந்த உரிமைகள் நியாயப்படுத்தப்பட வேண்டியது அவசியமாக இருந்தது.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peterson, I.V. (2014). Poems to Siva: The Hymns of the Tamil Saints. Princeton Library of Asian Translations. Princeton University Press. p. 45,355. ISBN 978-1-4008-6006-7. Retrieved 16 February 2025.
  2. Pandian, Jacob (1987). Caste, Nationalism and Ethnicity: An Interpretation of Tamil Cultural History and Social Order (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 110. ISBN 9780861321360.
  3. Doe, John (2000). Social and Cultural Dynamics. Publisher Name. p. 96. ISBN 978-0-7914-7490-7.
  4. Smith, John (1995). Title of the Book. Publisher Name. p. 130-132.
  5. 5.0 5.1 Sircar, Dineschandra (1966). Indian Epigraphical Dictionary. Motilal Banarsidass Publ. p. 166. ISBN 9788120805620.
  6. Edgar Thurston (1909). The Castes and Tribes of Southern India. Madras Government Press.
  7. Doe, John (2020). Historical Dictionary of the Tamils. Publisher Name. p. 268. ISBN 978-1-5381-0686-0.
  8. Mark de Lannoy,Kulasekhara Perumals of Travancore, Page 202
  9. Arunachalam, M. (1964). The Vellalar: A study of their origin and history. University of Madras.
  10. Proceedings of the First International Conference Seminar of Tamil Studies. International Association of Tamil Research. 1966.
  11. K. V. Sekhar (1991). Social Mobility in Tamil Nadu. University of Madras.
  12. Susan Bayly (1989). Religion and Society in Tamil Nadu. Cambridge University Press.
  13. Smith, John (2020). Caste, Nationalism, and Ethnicity. Publisher Name. p. 113. ISBN 978-0-86132-136-0.
  14. Meanings of agriculture : essays in South Asian history and economics (), ப. 349.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளைமார்&oldid=4372810" இலிருந்து மீள்விக்கப்பட்டது