பிலால்
பிலால் (ரலி) Bilal ibn Rabah al-Habashi بلال بن رباح | |
---|---|
![]() பாரசீகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சிற்பம் (10ம் நூற்றாண்டு), "பிலால் தொழுகைக்காக அழைத்தல்" | |
பிறப்பு | 580 மக்கா, அரேபியா |
இறப்பு | மார்ச்சு 2, 640 டமாஸ்கஸ் அல்லது மதீனா | (அகவை 59)
சமயம் | இஸ்லாம் |
பிலால் இப்னு ராபா அல் ஹபாஷி (Bilal ibn Rabah al-Habashi) அடிமையாக இருந்து இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களில் முதலாமவர். இவர் 578-582 காலப்பகுதியில் மெக்காவில் பிறந்த எத்தியோப்பியர் ஆவார்.
அபூபக்கரினால் விடுவிக்கப்பட்ட அடிமைகளில் இவரும் ஒருவர். சிறந்த குரல் வளம் படைத்தவர். இதனால் முகம்மது நபி அவர்கள் ஆப்பிரிக்க அடிமையாக இருந்த பிலாலைத் தனது தொழுகைக்கு அழைப்புவிடும் 'அதான்' சொல்பவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் "பிலால் இப்னு ரியா", "இப்னு ராபா", "பிலால்-அல்-ஹபாஷி" அல்லது "எத்தியோப்பியாவின் பிலால்" எனவும் அழைக்கப்பட்டார்.