பிரம்மவர்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேத கால பிரம்மவர்த்தப் பகுதி (ஆரஞ்சு நிறம்)

பிரம்மவர்த்தம் (Brahmavarta), சரசுவதி ஆற்றுக்கும் காகர் ஆற்றுக்கும் இடைபட்ட குறுகிய பகுதி என மனுதரும சாத்திரம் எனும் தொன்மை வாய்ந்த இந்து சமய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரியர்கள் குறுகிய பிரம்மவர்த்தப் பகுதிகளில் முதலில் குடியேறினர். இப்பகுதிகளில் தான் முதலில் இருக்கு வேதம் வெளிப்பட்டதாகக் கருதப்படுகிறது. சரசுவதி ஆறு பிரம்மவர்த்தத்தின் புனித ஆறாகும். பிரம்மவர்த்ததின் அருகில் உள்ள பகுதிகளில் குருச்சேத்திரம், மத்சயம், பாஞ்சாலம், சூரசேனம் புகழ் வாய்ந்தவைகள். [1][a] [2]

பிரம்மவர்த்தப் பகுதியில் மிலேச்சர்களின் ஆதிக்கம் அதிகரிக்கவே, ஆரியர்கள் தென்கிழக்கு நோக்கி வட இந்தியா எனப்படும் ஆரியவர்த்தம் பகுதிகளில் குடியேறினர். [3] [b][5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Notes

  1. These are the ancient Kuru, Matsya, Panchala and Surasena kingdoms.
  2. Translated as "Land of Brahmin sages".[4]

Citations

  1. Manu (2004). Olivelle, Patrick (ed.). The Law Code of Manu. Oxford University Press. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19280-271-2. {{cite book}}: Unknown parameter |editorlink= ignored (help)
  2. Deshpande, Madhav (1993). Sanskrit & Prakrit, Sociolinguistic Issues. Motilal Banarsidass. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-12081-136-2.
  3. Deshpande, Madhav (1993). Sanskrit & Prakrit, Sociolinguistic Issues. Motilal Banarsidass. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-12081-136-2.
  4. Scharfe, Hartmut (1989). The State in Indian Tradition. BRILL. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 900-4-09060-6.
  5. Daniélou, Alain (2003) [1971]. A Brief History of India. Trans. Hurry, Kenneth F. Inner Traditions / Bear & Co. pp. 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59477-794-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மவர்த்தம்&oldid=3777625" இலிருந்து மீள்விக்கப்பட்டது