உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமோதவர்தனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமோதவர்தனி
Pramodhawardhani
Çrī Kahulunnan
Çrī Sanjiwana
பிரமோதவர்தனி எனும் சிறீ சஞ்சீவனாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மத்திய ஜாவா சோச்சிவான் புத்த கோயில்
மாதரம் அரசி சிறீ சஞ்சீவனா
ஆட்சிக்காலம்c. 847 – 856
துணைவர்ராக்காய் பிக்கத்தான்
ராக்காய் பிக்கத்தான் தியா சலடு
குழந்தைகளின்
பெயர்கள்
ராக்காய் காயூவாங்கி தியா லோகபாலா
மரபுசைலேந்திர வம்சம்
தந்தைசமரதுங்கன்
மதம்மகாயான பௌத்தம்
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

பிரமோதவர்தனி அல்லது சிறீ சஞ்சீவனா (ஆங்கிலம்: Pramodhawardhani; இந்தோனேசியம்: Çrī Kahulunnan; Çrī Sanjiwana என்பவர் கிபி 9-ஆம் நூற்றான்டின் நடுச் சாவகத்தின் மாதரம் இராச்சியத்தை ஆண்ட ராக்காய் பிக்கத்தான் (ஆட்சி: 838-850) என்பவரின் மனைவியும் அரசியும் ஆவார். இவர் சிறீ ககுலுன்னன் (Çrī Kahulunnan) அல்லது சிறீ சஞ்சீவனா (Çrī Sanjiwana) என்றும் அழைக்கப்பட்டவர்.

இவர் சைலேந்திர மன்னர் சமரதுங்கனின் (ஆட்சி: 812—833) மகளும் ஆவார்.[1]:108 சஞ்சய வம்சத்தின் இளவரசரான ராக்காய் பிக்கத்தானுடன் நடந்த இவரின் அரசத் திருமணம் இந்து சஞ்சய அரச மரபு மற்றும் பௌத்த சைலேந்திர வம்சங்களுக்கு இடையிலான அரசியல் நல்லிணக்கமாக நம்பப்பட்டது.

வரலாறு

[தொகு]

உலகப் புகழ் பெற்ற போரோபுதூர் பௌத்த நினைவுச் சின்னத்தை கட்டி முடித்தமைக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். அத்துடன் கெவு சமவெளியில் பல பௌத்த கோவில்களை அமைத்துள்ளார். இவற்றில் செவு கோயில் வளாகம், பிளவோசான் கோவில் வளாகம், சோச்சிவான் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சிறிய பௌத்த பெர்வாரா கோவில்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இவரின் பெயர் காராங்தெங்கா கல்வெட்டு, திரி தெப்புசான் கல்வெட்டு, உரூக்கம் கல்வெட்டு போன்ற பல கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 842-ஐச் சேர்ந்த திரி தெப்புசான் கல்வெட்டில் சீமா (வரி-நீக்கப்பட்ட) நிலங்கள் பிரமோதவர்தனியினால் போரோபுதூர் பராமரிப்புக்காக வழங்கப்பட்டதாகப் பொறிக்கப்பட்டுள்ளது.[2]

சோச்சிவான் கோயில்

[தொகு]

829 (பொ.ஊ 907) ஐச் சேர்ந்த ரூக்கம் கல்வெட்டில் ரூக்கம் கிராமம் நினி ஜாஜி ராக்ரியான் சஞ்சீவனாவினால் புனரமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இக்கிராமம் எரிமலை வெடிப்பினால் அழிந்திருந்தது. லிம்வுங்கில் அமைந்துள்ள ஒரு புனித கட்டிடத்தை கவனித்துக்கொள்வது ரூக்கம் கிராமவாசிகளின் கடமை ஆகும். இந்தப் புனித கட்டிடம் சோச்சிவான் கோவில் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரமோதவர்தனியின் தோற்றமே பிரம்பானான் கோவிலில் அமைந்துள்ள துர்க்கை அம்மனின் உருவத்திற்கு முன்மாதிரியாக இருந்ததாக லோரோ ஜொங்கிராங் புராணம் விளக்கம் கூறுகிறது.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
  2. Drs. R. Soekmono, (1988) [1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed (5th reprint ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 46.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோதவர்தனி&oldid=4213406" இலிருந்து மீள்விக்கப்பட்டது