பயனர் பேச்சு:Vellaichamy bharathi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Vellaichamy bharathi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சண்முகம்ப7 (பேச்சு) 03:40, 23 சூன் 2012 (UTC)[பதிலளி]

இரண்டாவது மூளை ...[தொகு]

இரண்டாவது மூளை

நம் வயிற்றுக்குள் இன்னுமொரு மூளை (இரண்டாவது மூளை) இருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். கண்ணில் தெரியாத எந்தக் கதிரியகங்களாலும் கண்டறியமுடியாத எண்ணங்கள் மற்றும் ஆன்மா பற்றி எத்தனையோ வேதாந்திகள் நிறைய விளக்க உரைகள் தந்தாலும் ஸ்கேன் மற்று அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்ணில் காணக் கூடிய வயிற்றை பற்றி நாம் அறிந்திடாத செய்திகள் நிறைய உண்டு. அறிவியல் ஆய்வுகள் மனிதன் வயிற்றுப் பகுதியைத் தாண்டிய குடலுக்கும் மனித மூளைக்கும் மிகத் தொடர்பு இருப்பதாகவும், மனிதனின் பசியின்மை மற்றும் பல்வேறு மனநிலைகளுக்கும் இந்தக் குடல் பகுதி காரணமாக இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

வயிற்றுக்குள் என்ன நடக்கிறது என்பதை கண்ணால் பார்க்கும் வித்தையை (!!!) லண்டனில் உள்ள அறிவியல் மியூசியம் அறிமுகம் செய்துள்ளது (ஆராய்ச்சிப் பயனாளர்களுக்கு மட்டும்).

காலையில் உணவாக விழுங்கியது வாய்க்குள் உடைக்கப்பட்டு, கடைந்து, அமிலங்களால் கரைக்கப்பட்டு , இரைப்பை பாகாக சிறுகுடலில் தள்ளப்பட்டு கடைசியில் வெளிவருவது வரை உணவோடு விழுங்கப் பட்ட சிறிய மாத்திரையில் உள்ள கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு பெரிய திரையில் கண் முன்னே தெரிகிறது.

மனிதனின் இரண்டாவது மூளையாக செயல்படும் வயிற்றுப் பகுதியை அடுத்துள்ள குடலில் 100 மில்லியன் நியூரான் செல்கள் உள்ளன. இந்த செல்கள் வேகஸ் நரம்பின் மூலம் மூளையுடன் தொடர்பில் உள்ளன. செரிமானப் பகுதியின் சுவர்களில் பரவியுள்ள இந்த நியூரான்கள் மூளையைப் போல அதிக சிக்கலான யோசனை செய்வதில்லை. அரைத்த உணவை கலக்குவது, குடலை சுருங்கச் செய்வது, சத்து மற்றும் விட்டமின்களை உறிஞ்சி உட்கிரகிக்கச் செய்வது போன்ற வேலைகளை கட்டளையிடுவதுடன் நிறுத்திக் கொள்கிறது. வயிற்றுக்குள் சிலசமயம் " பட்டாம் பூச்சி பறப்பது போன்ற உணர்வு " வந்து போகும். இது வயிற்றுக்குள் இருக்கும் மூளை தலையில் இருக்கும் மூளையுடன் நேரடியாகப் பேசிக்கொள்வதால் ஏற்படும் செயல்.

மனிதன் அதுகமாகப் பயப்படும்போது அல்லது படபடப்பாக இருக்கும்போதோ குடல் பகுதியில் பாயும் ரத்தமானது தசைப் பகுதிக்கு வழிமாற்றம் செய்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்க விடுவது இந்த இரண்டாவது மூளைதான்.

நாம் சாப்பிட உணவு வாய்ப் பகுதியைத் தாண்டி சிறுகுடல் வரை சென்றடைய இருபது நிமிடங்கள் ஆகிறது. அதன்பிறகு அங்கு PYY எனும் (peptide tyrosine tyrosine) புரதம் வெளியிடப்பட்டு இரண்டாவது மூளையை இயக்கி தலையில் இருக்கும் மூளைக்கு வயிறு நிரம்பி விட்டது என்ற செய்தியைச் சொல்கிறது.

அதிகமாக உணவு உண்ட பிறகு கொஞ்சம் படுத்து எழுந்தால் நல்லது என்ற எண்ணம் வருவதற்கும் இந்த இரண்டாவது மூளையே காரணம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vellaichamy_bharathi&oldid=1871909" இலிருந்து மீள்விக்கப்பட்டது