நாலுகுளங்கரா மகாதேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாலுகுளங்கரா மகாதேவி கோயில்

நாலுகுளங்கரா மகாதேவி கோயில் [1] இந்தியாவின் கேரளாவில் உள்ள குத்தியாதோடு பஞ்சாயத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இது ஆலப்புழாவில் உள்ள ஒரு முக்கியமான தேவி கோயிலாகக் கருதப்படுகிறது. இது பட்டுகுளங்கரை சந்திப்பிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இல் அமைந்துள்ளது.

மூலவர், துணைத்தெய்வங்கள்[தொகு]

இங்கு நாலுகுளங்கர அம்மா என்று பிரபலமாக அறியப்படுகின்ற பத்ரகாளி உள்ளார். மேலும் சிவன், சுப்ரமணியன், பாலபத்ரா, சரஸ்வதி ஆகியோரும் உள்ளனர்.

விழாக்கள்[தொகு]

நாலுகுளங்கரா பூரம் எனப்படுகின்ற கோயில் திருவிழா (கொடியேற்று உல்சவம் - மலையாள நாட்காட்டி மகரம் - மாகோம் தோசல், பூரம்) ஆண்டுதோறும் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. விருச்சிகம் 1வது பொங்கலை பெண்களுக்கான விழாவாகும். பொங்கலும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]