நன்னூல் உரைநூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்னூல் என்னும் தமிழ் இலக்கணநூல் 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவர் இயற்றியது. இதற்கு உரைநூல்கள் சில தோன்றியுள்ளன. அவை வெவ்வேறு காலங்களில் தோன்றியவை.[1]

மயிலைநாதர் உரை[தொகு]

இவ்வுரையின் காலம் 14 ஆம் நூற்றாண்டு. நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவரைப் போலவே மயிலைநாதரும் சமணர் ஆவார். சீயகங்கன் மரபினையும், சமண ஆசிரியர்களையும் பெரிதும் போற்றுபவர்.

சங்கர நமச்சிவாயர் விருத்தி உரை[தொகு]

இவ்வுரையின் காலம் 18 ஆம் நூற்றாண்டு. சங்கர நமச்சிவாயர் சைவர். இவரது உரை பெரிதும் போற்றப்பட்டது. சங்கர நமச்சிவாயர் உரையின் துணையோடு மேலும் சிலர் காண்டிகை உரையும் விருத்தியுரையும் எழுதியுள்ளனர்.

சிவஞான முனிவர் விருத்தியுரை[தொகு]

இவ்வுரையின் காலம் 18 ஆம் நூற்றாண்டு சங்கர நமச்சிவாயர் விருத்தியுரைக்கு மேலும் விளக்கங்கள் தரும் உரை இது. சிவஞான முனிவர் திருவாடுதுறை ஆதீன சிவாசாரியார்.

பிற உரைநூல்கள்[தொகு]

சங்கர நமச்சிவாயர் உரையின் துணையோடு மேலும் சிலர் காண்டிகை உரையும் விருத்தியுரையும் எழுதியுள்ளனர்.

அவற்றுள் குறிப்பிடத் தக்கவை:

  • முகவை இராமானுச கவிராயர் உரை [2]
  • வேதகிரி முதலியார் உரை [3]
  • விசாகப்பெருமாள் ஐயர் உரை [4]
  • ஆறுமுக நாவலர் காண்டிகை உரை
  • பவானந்தம் பிள்ளை உரை
  • வை. மு. சடகோப ராமானுசாசாரியார் உரை. இது பள்ளி மாணவர்களுகென்றே எழுதப்பட்ட உரை.

மற்றும் ஆசிரிய நிகண்டு செய்த ஆண்டியப்பப் புலவரும், கூழங்கைத் தம்பிரான் என்பவரும் உரை செய்துள்ளனர் எனத் தெரிகிறது. இவை கிடைக்கவில்லை.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 132. 
  2. பதிப்பு 1847
  3. பதிப்பு 1851
  4. பதிப்பு 1880
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னூல்_உரைநூல்கள்&oldid=2384634" இலிருந்து மீள்விக்கப்பட்டது