உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கர நமச்சிவாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கர நமச்சிவாயர் என்பவர் பன்னூற் செந்தமிழ்ப் பாவலர் என்று புகழப்பட்டு 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர் ஆவார். நன்னூலுக்கு, மயிலைநாதருக்குப் பின் உரை எழுதியவர். இவர் பதினோழாம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் தடிவீரையன் கோயில் தெருவில் வாழ்ந்தவர். சைவ வேளாளர் குடியில் தோன்றியவர். அக்காலத்தில் இவரைச் சங்கர நமச்சிவாயப்பிள்ளை என்றும், சங்கர நமச்சிவாயப்புலவர் என்றும் வழங்கி வந்தனர். இவரது ஆசிரியர், நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர். சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு உரை இயற்றக் காரணமாய் இருந்தவர், ஊற்றுமலை சமீன்தாராகிய இருதாலய மருதப்பத் தேவர் ஆவார்.[1]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இருதாலய மருதப்பத் தேவர்: தமிழ் வளர்த்த தகைமையாளர் கட்டுரை, ஆசிரியர்: புலவர் சோமசுந்தரவேலாயுதம், காவ்யா தமிழ் (காலாண்டிதழ்) 9 தை (சனவரி-மார்ச் 2014) பக்கம்37-39
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர_நமச்சிவாயர்&oldid=4304421" இலிருந்து மீள்விக்கப்பட்டது