தொண்டைமானாற்றுப் பாலம்

ஆள்கூறுகள்: 9°49′0″N 80°10′0″E / 9.81667°N 80.16667°E / 9.81667; 80.16667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொண்டைமானாற்றுப் பாலம்
போக்குவரத்து AB21 நெடுஞ்சாலையில் மோட்டார் வண்டிகள்
தாண்டுவது வடமராட்சி கடல் நீரேரி
இடம் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாண மாவட்டம்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை
கட்டுமானம் தொடங்கிய தேதி 1953
அமைவு 9°49′0″N 80°10′0″E / 9.81667°N 80.16667°E / 9.81667; 80.16667

தொண்டைமானாற்றுப் பாலம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு வண்டிகளுக்கும் பாதசாரிகளுக்குமான சாலைப் பாலம். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், வல்வெட்டித்துறை நகருக்கு அண்மையில் வடமராட்சி கடல் நீரேரிக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இது முதலில் 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[1] உள்நாட்டுப் போரின் விளைவாக 1985ல் இது அழிந்துபோனது. பின்னர் 2004 ஆம் ஆண்டில் இது மீள அமைக்கப்பட்டது.

இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து, கடல்நீர் வடமராட்சிக் கடல் நீரேரிக்குள் வராமல் தடுப்பதற்கான ஒரு தடுப்பணையாகவே இது பயன்பட்டு வந்தது. இத்தடுப்பணை 1985ல் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களினால் அழிந்துவிட்டது.[2] அழிவதற்கு முன் இதன் மதகுக் கதவுகள் கடல்நீர் நீரேரிக்குள் வருவதைத் தடுப்பதற்கு மட்டுமன்றி, மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் செல்ல அனுமதிப்பதற்கும் பயன்பட்டது.[2] 2004ல் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம் இந்தப் பாலத்தையும் தடுப்பணையையும் மீளக் கட்டியது. இது தற்போது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் ஒரு முக்கிய இணைப்பாகப் பயன்படுகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A river for Jaffna – the Arumugam Plan". Archived from the original on 2009-05-08. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
  2. 2.0 2.1 2.2 "Thondamannar sluice gate to be reconstructed". பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
  3. "A River for Jaffna". Archived from the original on 2003-07-08. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைமானாற்றுப்_பாலம்&oldid=3559633" இலிருந்து மீள்விக்கப்பட்டது