தூய பீட்டர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
Appearance
நிறுவப்பட்டது | 2022 |
---|---|
வகை | மருத்துவக் கல்லூரி |
துறை முதல்வர் | மரு சோமசேகர் |
அமைவு | பத்தலபள்ளி, ஒசூர், தமிழ்நாடு |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | https://spmch.ac.in/ |
தூய பீட்டர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (St. Peter's Medical College Hospital and Research Institute) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் ஒசூர் மாவட்டத்தில், பத்தலப்பள்ளியில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 7 இல் 121 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில், அதியமான் பொறியியற் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள ஒரு சுயநிதி மருத்துவக் கல்லூரி ஆகும். இது செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கியது. இந்த நிறுவனம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், உடன் இணைந்துள்ளது.[1] இந்த மருத்துவக் கல்லூரியானது 2022 பெப்ரவரி 21 அன்று திறக்கப்பட்டது.[2]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "சபாஷ் தமிழ்நாடு… எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 10,375 இடங்கள்; இந்தியாவிலேயே அதிகம்!". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
- ↑ ஒசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு விழா ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். பங்கேற்பு, செய்தி தினமணி 22. பெப்ரவரி 2022