திருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை [1] நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருவருட்பயன் என்னும் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரைநூல் இது. இந்த உரையை எழுதியவர் நிரம்ப அழகிய தேசிகர். உரை தொடங்கும்போது ஒரு காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது.[2] அத்துடன் இவரே தன்னைப் பற்றியும், உரைநூலைப் பற்றியும் அறிமுகம் செய்துகொள்ளும் சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்றும் உள்ளது.[3]

இந்த உரையுடன் இந்த உரைநூலுக்குப் பின்னர் தோன்றிய 'வேலப்ப பண்டாரம் பதவுரையும் சிந்தனையுரையும்' என்னும் பகுதியும் சேர்த்து நூல் வெளியாகியுள்ளது. மற்றும் வெள்ளை வாரணர் விளக்கத்தோடு கூடிய பதிப்பும் வெளிவந்துள்ளது.[4]

உரை தரும் குறிப்புகள்[தொகு]

  • சிவபெருமானின் ஐந்தொழில்களைத் தமிழ்ச்சொறகளால் குறிப்பிடுகிறார் - படைப்பு, நிலை, ஈறு, மறைப்பு, அருள்
  • சங்கரன் வடமொழி விளக்கம் - சம் = சுகம், கரம் = பண்ணுவான். இரண்டும் புணர்ந்து சங்கரன் என நின்றது.
  • ஒருபொருட்கிளவி - பசு, உயிர், சேதனன், புற்கலன், சீவன், அணு, வியாபகன், ஆன்மா

திருவருட்பயன் குறள் வெண்பாவால் ஆன நூல். இந்தக் குறளால் இன்னது சொல்லப்பட்டது என்று ஒவ்வொரு குறளுக்கும் இந்த உரையானது விளக்கம் தருகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 62. 
  2. தேசத்து அடியார் நினைந்து உருகி நின்றிட்ட
    வாசத் தளை கடக்க மாட்டாது - பாசத்
    திருக்கோட்டு முக்கண் இவபெருமான் ஈன்ற
    ஒருகாட்டு நால்வாய் உவர்.

    (இந்த வெண்பா பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது)
  3. கொ. சண்முக முதலியார் பதிப்பு
  4. 1965 பதிப்பு